பக்கங்கள் செல்ல

Monday, August 19, 2024

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        கிறித்தவ மிசனரிகள் இஸ்லாமியர்களின் அல்குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்கையில் கண்டிப்பாக குர்ஆனின் ஹஃப்ஸ் வர்ஸ் போன்ற மாறுப்பட்ட ஓதல் முறைகள் குறித்து விமர்சனம் செய்து அதன் காரணத்தினால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முடிவிற்கு வருவார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாறுபட்ட ஓதல் முறை என்பது அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மாறுபட்ட ஓதல் முறை என்பதையும், அது இன்றுவரை முத்தவாதிரான ஓதல் முறைகளாக இன்றும் இருப்பது குறித்தும், அதன் சங்கிலி தொடர் குறித்தும் தெளிவாக விளக்கி பதிலளித்தும் உள்ளோம்.(1)(2) ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்த விமர்சனத்தில் அவை முத்தவாதிரான கிராத்துடன் ஒத்தமையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ்களை பலவீனமானது என்பதையும் விளக்கியும் இருக்கிறோம். இன்றும் அல்குர்ஆன் கல்லூரிகள், பயிலும் மாணவரான காரீ, யாரிடம் இருந்து இந்த ஓதலை பெற்றார் என்பதை நபி(ஸல்) அவர்கள் வரை செல்லும் முறியாத அறிவிப்பாளர் தொடரை தாங்கி நிற்கும் சான்றிதழ்களாக வழங்கி வருகின்றன. வாழையடி வாழையாக யார் யாரிடம் இருந்து இந்த ஓதலை கற்றார் என்பதை முழு விவரமாக குறிப்பிட்டு இன்றும் இஸ்லாமிய கல்லூரிகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கல்லூரிகளால் வழங்கப்பட்ட சில இஜாஸாக்களை கீழே இணைக்கிறோம்.

    ஒரு சாதரண கூகுள் தேடல் கூட இந்த இஜாஸாக்கள் குறித்த விக்கிபீடியா போன்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதை காட்டுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்களில் எது சரியானது என்பதை உறுதி படுத்திக்கொள்ள தீர்க்கமான அளவீடுகளை கொண்டிருக்கிறோம் என்பதையும், அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறு பாதுகாத்துள்ளான் இந்த சமூகத்தின் அளப்பரிய அக்கறையின் மூலம் என்பதையும் மேலே உள்ள இஜாஸாக்கள்(சான்றிதழ்கள்) படம் பிடித்து காட்டுகிறது. அல்லாஹு அக்பர்.

    இவ்வளவு தெளிவான சான்றுகள் கொண்டு விளக்கிய பிறகும், குர்ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள் எப்படி மாறுபட்ட புதிய ஏற்பாட்டின் வாசிப்புக்களில் சரியானதை உறுதி படுத்தினார்கள், படுத்துகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல் குர்ஆனில் இடம்பெறும் குத்தீபு, குஃத்தீபு மாறுபட்ட ஓதல் முறைபற்றி மணிக்கணக்கில் விமர்சனம் செய்தவர்கள், இவர்களின் புதிய ஏற்பாட்டின் மாறுபட்ட வாசிப்பிற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம். என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் மைய கருத்து மாறாது என்ற வாதம் குர்ஆனின் மாறுபட்ட கிராத்திற்கும் பொருந்தும் எனும் போதிலும் இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகளின் புதிய ஏற்பாட்டை அதே அளவீட்டை கொண்டு அளக்கப்போகிறோம்., குர்ஆனைவிட மிக தீர்க்கமான வாத்தையை கொண்டு புதிய ஏற்பாடு வேத்தின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் பேசுகிறது என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். மாறுபட்ட குர்ஆன் ஓதலை நிர்ணயிக்க எப்படி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய தீர்க்கமான அளவீடுகளை நாம் முன்வைக்கிறோமோ அதே போன்று எதாவது அளவீடுகளை இவர்களின் முன்னோர்களும் இவர்களும் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் விளக்க உள்ளோம். 

சபைப்பிதாக்களை சாட்சிக்கு அழைக்கும் கிறித்தவர்கள்:
    முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். அதாவது இவர்கள் கூறும் சபைப்பிதாக்கள் இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசன்ங்களை மட்டும் மேற்கோள் காட்டவில்லை, மாறாக இன்னும் இன்றைய புதிய ஏற்பாட்டில் இல்லாத பல வசனங்களையும், இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசனங்களின் மாறுபட்டவைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த கட்டுரையில் மாறுபட்ட வாசிப்புக்கள் குறித்து காணவிருக்கிறோம். இந்த மாறுபட்ட வாசிப்பு குறித்த தொகுப்பினை Dr. J. A. Moorman அவர்களது Early Manuscripts, Church Fathers, & the Authorized Version என்ற நூலில் இருந்து காட்டவிருக்கிறோம். CHAPTER FIVE: THE DIGEST: 149 DOCTRINAL PASSAGES “DISTINCTLY BYZANTINE” என்ற பகுதியில் கிட்டதட்ட KJVல் இருந்து NIVல் மாறுபடும் 149 வசனங்களை சபைப்பிதாக்களின் மேற்கோள்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.

வ.
எண்
வசனம் மாறுபட்ட வாசிப்பு -1  மற்றும் ஆதாரம் மாறுபட்ட வாசிப்பு -2  மற்றும் ஆதாரம்
1. மத்தேயு 5.22
That whosoever is angry with his brother without a cause shall be in danger of the Judgment.

Monday, August 5, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக யோவானின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். கிறித்தவ உலகின் கூற்றின் படி ஏனைய சுவிஷேசங்களில் இருந்து மாறுபட்டு இந்த சுவிஷேசம் இயேசு குறித்து பிறப்பில் இருந்து விவரிக்காமல், படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இருப்பதாக கூறுகிறது.எனவே கிறித்தவர்களின் இறையியலின் ஆணி வேரை சுமந்து நிற்பதாக இந்த சுவிஷேசம் அமைந்துள்ளது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் யோவானின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம்.


    முன்னே நாம் கண்ட மூன்று நற்செய்தி நூலிலும் யார் யாரிடம் கேட்டு எழுதினார்கள் என்று எந்த தகவலும் இருக்காது. இதிலும் யார் எழுதினார் என்ற எந்த குறிப்பும் இல்லை. மாறாக இது யாரது கூற்று என்பது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:20-25)
    யாரோ ஏசுவின் பிரியத்திற்குரிய சீடனின் கூற்றை யாரோ பெயர் தெரியாத நபர் பதிந்துள்ளார் என்பதை மேற்குறிபிட்ட வசனம் தெளிவாக கூறுகிறது. மேற்குறிபிட்ட யோவான் 21:20-25 வரையிலான வசனத்தில் கூறப்படும் சீஷனின் பெயர் குறித்து எந்த தகவலும் புதிய ஏற்பாட்டில் இடம் பெறவில்லை. ஆனால் கிறித்தவ உலகம் அந்த சீடன் யோவான் என்று கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த வாக்குமூல வசனங்களின் நிலை குறித்து கிறித்தவ உலகின் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு புதிய ஏற்பாட்டின் ஏனைய தகவல்களையும் ஆய்விற்கு உட்படுத்துவோம்.


    யோவானின் படியான சுவிஷேசத்தை சற்று கவனித்து அவதானித்தால், அந்த சுவிஷேசம் இரண்டு முடிவுரைகளை கொண்டிருப்பதை காணமுடியும். அதாவது யோவானின் படியான சுவிஷேத்தின் 20ம் அதிகாரம் பின்வருமாறு முடிவடைகிறது
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:30-31)
    ஆனால் யோவான் 20ம் அதிகாரத்துடன் முடிவையவில்லை. அதன் பிறகு ஒரு அதிகாரம் இடம் பெறுகிறது. அதுவும் இதே கருதுகோளுடன் கூடிய முடிவுரையை கொண்டு முடிவதை காண முடிகிறது.
அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:24-25)
    யோவானின் படியான சுவிஷேசம் யோவான் 20:30-31 மற்றும் 21:24-25 ஆகிய இரண்டு முடிவுரையை தாங்கி நிற்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம். அதாவது 20ம் அத்தியத்துடன் ஒருவர் எழுதி முடித்ததை மறுபடியும் வேறு ஒருவர் 21ம் அத்தியத்தையும் இணைத்து சாட்சியம்!!! கூறுவதாய் உள்ளது ப்படி இரு முடிவுரைகளை தாங்கி நிற்பதாலேயே தற்கால கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையோர், யோவான் 21:24-25 பிற்செர்க்கை என்று கூறிவருகின்றனர். அதாவது இந்த சுவிஷேத்தை அறிவித்ததாக கூறப்படும் சீஷன் குறித்த வாக்குமூலம் ஒரு பிற்சேர்க்கை என்று கூறுகின்றனர்.
    Here we must take up at once the possibility that 21:24-25 is a late addition to the Gospel and that therefore its evidence as to the authorship of the Gospel may well be quite unreliable. This issue is inseparable from the question of the original ending of the Gospel. A very large majority of modern scholars have supposed that the Gospel originally ended at the end of chapter 20, since 20:30-31 reads, to these scholars, like a conclusion that appropriately brings the Gospel narrative to a close. It follows that chapter 21 is a kind of appendix added later ( Jesus and the Eyewitnesses: The Gospels as Eyewitness Testimony By Richard Bauckham, Ch.14. The Gospel of John as Eyewitness Testimony)

    வசனங்கள் 21:24-25 என்பது நற்செய்திக்கு தாமதமாகச் சேர்க்கப்பட்டது என்பதற்கான சாத்தியக்கூறுகளை இங்கே நாம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும், எனவே நற்செய்தியின் ஆசிரியர் பற்றிய அதன் சான்றுகள் நம்பகத்தன்மையற்றதாக இருக்கலாம். நற்செய்தியின் அசல் முடிவு குறித்த கேள்வியிலிருந்து இந்த சிக்கல் பிரிக்க முடியாதது. 20:30-31 வசனங்கள் சுவிசேஷ விவரிப்பை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முடிவு போல, இந்த அறிஞர்களுக்கு தெரிவதால் தற்கால அறிஞர்களில் பெரும்பாலோர் சுவிசேஷம் அசலாக அத்தியாயம் 20 இன் இறுதியில் முடிந்தது என்று கருதுகின்றனர். அத்தியாயம் 21 என்பது பின்னர் சேர்க்கப்பட்ட ஒரு வகையான பிற்சேர்க்கையாகும். ( Jesus and the Eyewitnesses: The Gospels as Eyewitness Testimony By Richard Bauckham, Ch.14. The Gospel of John as Eyewitness Testimony)
    அதாவது “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்” என்ற சாட்சியை தாங்கி நிற்கும் 21ம் அத்தியாயம் முழுவதுமே பிறசேர்க்கை அல்லது இடைச்செருகல். எனவே இந்த இடைச்செருகலுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் தேடி, மேலும் யோவானின் படியான சுவிஷேசத்தை ஆய்வுக்குட்படுத்தும் போது வசனங்களில் இருக்கும் ஒரு ஒழுங்கற்றதன்மை புலப்பட்டது. பின்வரும் செய்தியை ஆய்வு செய்வோம்.
சீமோன் பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். (யோவான் 21:2-7)
    மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் “οι του ζεβεδαιου” என்ற கிரேக்க சொற்பிரயோகம். பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள்- the sons of Zebedee என்பதை KJVல் பார்க்க முடிகிறது. அதாவது செபெதேயுவின் மகன்கள் என்று பொருள். செபெதேயுவின் மகன்கள் வேறு யாரும் இல்லை அவர்கள் யாக்கோபும் யோவானும் தான்.
சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். (லூக்கா 5:10)
    உண்மையில் அன்பாயிருந்த சீஷன் செபெதேயுவின் குமாரராகிய யோவானாக இருந்தால், “οι του ζεβεδαιου”- செபெதேயுவின் மகன்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தமாட்டார். நேரடியாக நானும் யாக்கோபும் என்றோ யாக்கோபு என்று மட்டுமோ கூறி இருந்திருப்பார். மேலும் அங்கிருந்தவர்கள் எல்லாம் அவர்களது மற்றப்பெயருடன் சேர்த்து கூறப்படும் போது அந்த செய்தியின் தொடர்ச்சியான யோவான் 21:7ல் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் என்ற சொற்பிரயோகம் திடீர் என நுழைகிறது. ஏன் அந்த அன்பாயிருந்த சீஷன் தோமாவகவோ, நாத்தான்வேலுவாகவோ, யாக்கோபாகவோ, வேறு இருவரில் ஒருவராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற கேள்விகளுக்கு கிறித்தவ உலகில் ஆதாரங்களின் அடிப்படையிலான பதிலேதும் இருப்பதாக தெரியவில்லை. “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்பது இந்த சுவிஷேசத்தை வாசிப்பவரை மடைமாற்றம் செய்ய வேறு நோக்கத்துடன் இடைச்செருகப்பட்ட வாசகமாக தோன்றுகிறது. எனவேதான் Burton L. Mack என்ற புதிய ஏற்பாட்டின் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்.
    By not saying which ones, however, the author allowed the reader to fill in the blanks as one wished. Perhaps inadvertently, the author succeeded in crafting a very clever puzzle for subsequent readers: Who was the beloved disciple? Was he one of the disciples mentioned in the gospel? And which one? The only one he could not have been was Peter, for he and Peter were mentioned together in four stories as contestants.
    Why would anyone have wanted to do that? Interest in bringing the fourth gospel into line with centrist ideology dictated the need to introduce an apostolic guarantor into the story of the disciples. But since the people who produced the fourth gospel had never had such a guarantor or needed one, the author was confronted with an embarrassing situation. The solution was to avoid the term apostle (it does not appear in the Johannine tradition), include the sons of Zebedee as an accommodation to the apostolic myth, and assign the writing of the gospel to the mysterious, unnamed figure of the beloved disciple. (Who Wrote the New Testament?: The Making of the Christian Myth by Burton L. Mack Part 2, 8.Letters from the Apostles)
    எவ்வாறாயினும், யார் என்று கூறாமல், ஆசிரியர் தனது விருப்பப்படி வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ள வாசிப்பவரை விட்டுவிட்டார். ஒருவேளை கவனக்குறைவாக, அடுத்தடுத்து வாசிப்பவர்ளுக்கு மிகவும் புத்திசாலித்தனமான புதிரை உருவாக்குவதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்: அன்பான சீடர் யார்? அவர் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சீடர்களில் ஒருவரா? யார் அவர்? அவரும் பேதுருவும் போட்டியாளர்களாக நான்கு கதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால், அவர் பேதுருவாக மட்டும் இருந்திருக்க முடியாது.
    ஏன் அதை ஒருவர் செய்ய விரும்ப வேண்டும்? நான்காவது சுவிசேஷத்தை மையவாத சித்தாந்தத்திற்கு ஏற்ப கொண்டு வருவதில் உள்ள ஆர்வம், சீடர்களின் கதையில் ஒரு அப்போஸ்தலிக்க உத்தரவாதத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திணித்தது. ஆனால் நான்காவது சுவிசேஷத்தை உருவாக்கியவர்களுக்கு அத்தகைய உத்தரவாதம் இல்லை அல்லது தேவைப்படாமல் இருந்ததால், ஆசிரியர் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டார். இதற்கு விடை, அப்போஸ்தலன் என்ற சொல்லைத் தவிர்த்து (இது ஜோஹனைன் பாரம்பரியத்தில் இடம்பெறவில்லை), அப்போஸ்தலிக்க புராணத்திற்கு இடமளிக்கும் வகையில் செபதேயுவின் மகன்களை உள்ளடக்கி, மேலும் அன்பான சீடரின் மர்மமான, பெயரிடப்படாத நபருக்கு நற்செய்தி எழுதுவதை ஒதுக்குவதே ஆகும்.
    அதாவது, “சுவிஷேசம் என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுகதையை, அப்போஸ்தல செய்திகள்தான் என்று கூறி மைய கோட்பாட்டில் இணைப்பதற்காக “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்ற சொற்பிரயோகம் இடைச்செருகல் செய்யப்பட்டதாக மேலே கூறப்படுகிறது. நேரடி பெயரை குறிப்பிட்டால், இப்போது மேற்கொண்டு நாம் செய்வது போன்று ஆய்வை செய்து மக்கள் மறுத்துவிடுவார்கள் என்ற அச்சமே இந்த சொற்ப்பிரயோகத்தை உள்ளே இணைக்க காரணமாக இருந்துள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது. மேலும் எலைன் பேகல்ஸ் தனது “Beyond Belief: THE SECRET GOSPEL OF THOMAS நூலில் பேதுரு தோமா போன்ற இயேசுவின் உண்மை சீடர்களை ஓரம் கட்டும் நோக்கத்துடனே “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என்ற சொற்பிரயோகம் இடைச்செருகல் செய்யப்பட்டதாக கூறுகிறார்.

    இப்படி யோவானின் படியான சுவிஷேசத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” யார் என்பது குறித்து மேலும் தேடுவோம்.  யோவானின் படியான சுவிஷேசத்தில் “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” குறித்த தகவல் எந்த எந்த வசனங்களில் இடம் பெறுகிறது என்பதை முதலில் காண்போம்


அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். (யோவான் 13:23)

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். (யோவான் 19:26)

உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். (யோவான் 20:2)

சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டு பேரும் கூடியிருக்கும்போது, சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். (யோவான் 21:2-7)
    இந்த இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன், இயேசுவின் சீடனான யோவான்தான் என்ற இந்த கிறித்தவ உலகின் நம்பிக்கைக்கு ஆதாரமாய் அமைவது ஐரீனியஸின் இந்த கூற்றுதான். ஏனைய கூற்றுக்கள் அனைத்தும் அவரை பின்பற்றி கூறப்பட்டவைதான்.
Afterwards, John, the disciple of the Lord, who also had leaned upon His breast, did himself publish a Gospel during his residence at Ephesus in Asia.
அதன்பிறகு, இறைவனின் சீடரான, அவருடைய மார்பில் சாய்ந்திருந்த யோவான், ஆசியாவிலுள்ள எபேசஸ் என்ற இடத்தில் தாம் தங்கியிருந்தபோது ஒரு நற்செய்தியை அவரும் வெளியிட்டார். ( Against Heresies:Book III, Chapter I)
    கி.பி. 2ம் நூற்றாண்டின் ஐரீனியஸின் மேற்குறிபிட்ட இந்த குறிப்புதான் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் யோவான் தான் என்பதற்கு காலத்தால் முந்தையது. அதாவது இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில்தான் இந்த கருத்து முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது. அதுவரை இந்த கருத்து இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த இடத்தில் கிறித்தவ மிசனரிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது ஐரீனியஸ் ஸ்மிர்னாவின் பிஷப் பாலிகார்பின் சீடர், பாலிகார்ப் யோவானின் சீடர், எனவே ஐரினியஸின் கூற்று உண்மை என்று வாதிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பாலிகார்ப்பின் எழுத்துக்களில் இன்றும் எஞ்சி இருப்பது “பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபம்” மட்டுமே. இதில் ஏனைய சுவிஷேச வசனங்களை குறிப்பிட்ட பாலிகார்ப் ஒரு இடத்திலும் தப்பி தவறி கூட யோவானின் சுவிஷேச வசனங்களை குறிப்பிடவில்லை. எனவே பாலிகார்ப் யோவானின் சீடர் என்பதெல்லாம், ஐரீனியஸின் கருத்து, அதனை எந்த விதத்திலும் உறுதிபடுத்த இயலாது. ஐரீனியஸின் இந்த கருத்தின் தற்போதைய நிலைகுறித்து Delbert Burkett தனது An Introduction to the New Testament and the Origins of Christianity. Cambridge: Cambridge University Press, 2002; 2nd. ed., 2019. 14 The Gospel of John,P.No.231) கூறுகையில்:
Irenaeus claims that his information came from an older man, Polycarp bishop of Smyrna, who heard it from the apostles. For several reasons, most contemporary scholars doubt that the Gospel originated with John the apostle. (1) There is no evidence that John the apostle lived in Ephesus and some evidence that he did not. When Ignatius, bishop of Antioch, wrote to the church in Ephesus in the time of Trajan, he made no mention of John, though he did mention the apostle Paul’s much earlier stay in Ephesus. This omission suggests that John did not live there. (2) Other traditions suggest that John the apostle suffered martyrdom prior to the composition of Mark around 70 CE (Mark 10:39). (3) The thought of the Fourth Gospel has undergone a greater degree of theological development than that of the other three, making it unlikely that an eyewitness of Jesus’ ministry wrote it. If the Beloved Disciple was an actual disciple of Jesus, traditions begun by him must have undergone development before being included in the Gospel. 
ஸ்மிர்னாவின் பிஷப் பாலிகார்ப்  என்ற வயோதிகரிடம் இருந்து தகவல் வந்தது என்றும், அவர் அதை அப்போஸ்தலர்களிடமிருந்து கேட்டதாகவும் ஐரேனியஸ் கூறுகிறார். பல காரணங்களுக்காக, பெரும்பாலான சமகால அறிஞர்கள் அந்த சுவிசேஷம் அப்போஸ்தலன் யோவானிடமிருந்து வந்ததை சந்தேகிக்கின்றனர். (1) அப்போஸ்தலன் யோவான் எபேசஸில் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அவர் அவ்வாறு இருக்கவில்லை என்பதற்கு சில சான்றுகளும் உள்ளன. டிராஜனின் காலத்தில் அந்தியோக்கியாவின் பிஷப் இக்னேஷியஸ் எபேசஸில் உள்ள தேவாலயத்திற்கு கடிதம் எழுதியபோது, அவர் யோவானை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, இருப்பினும் அவர் அப்போஸ்தலன் பவுல் எபேசஸில் மிக முற்காலத்தில் தங்கியிருந்ததைக் குறிப்பிடுகிறார். இந்த புறக்கணிப்பு யோவான் அங்கு வசிக்கவில்லை என்று கூறுகிறது. (2) மற்ற மரபுகள்) மாற்கு எழுதப்படுவதற்கு முன் (மாற்கு 10:39) கி.பி 70க்கு முன். அப்போஸ்தலன் யோவான் கொல்லப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. (3) நான்காவது நற்செய்தியின் சிந்தனை மற்ற மூன்றையும் விட அதிக அளவு இறையியல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது, இது இயேசுவின் ஊழியத்தை நேரில் கண்ட சாட்சி எழுதியதற்கு வாய்ப்பில்லை. அன்பான சீடர் இயேசுவின் உண்மையான சீடராக இருந்தால், அவரால் தொடங்கப்பட்ட மரபுகள் நற்செய்தியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு மாறுபாடு அடைந்திருக்க வேண்டும்.

    எனவே ஐரீனியஸ் கூறுவதான “இந்த சுவிஷேசம் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் எழுதியது என்பதற்கோ அது யோவான் தான்” என்பதற்கோ வெளி ஆதாரங்களில் எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் கிறித்தவ உலகம் விசித்திரமான ஒரு வாதத்தையும் கையாள்கிறது, அதாவது இந்த சுவிஷேசத்தில் யோவானின் பெயர் குறிப்பிடப்படாததற்கு யோவானின் பணிவே காரணம் என்று கூறுகிறது. இந்த சுவிஷேசத்தில் சீமோன் பேதுரு, அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல், தோமா யூதாஸ்காரியோத்து, செபதேயுவின் குமாரர் ஆகியோரது பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. பலரின் பெயர் இல்லாத போது, இந்த சப்பைகெட்டும் எந்த தீர்வையும் இந்த சிக்கலுக்கு தராது.  “இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்” என்ற சொற்பிரயோகம் ஏனைய மூன்று சுவிஷேசத்திலும் இடம் பெறவில்லை, யோவானின் படியான சுவிஷேசத்தை தவிர. யோவானின் படியான சுவிஷேசம் இயேசுவுக்கு அன்பாயிருந்தவர்கள் குறித்து என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

✅இயேசு லாசருவிடம் அன்பாயிருந்தார்:

இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.( யோவான் 11:5)
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.(யோவான் 13:1)
    இயேசு இப்படி பலரிடம் அன்பாயிருந்தார் என்று யோவான் கூறுகிறது. அது என்னவோ அந்த சீடர் மட்டும் என்ன ஸ்பெஷல் அன்பை கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. எனவே யார் இந்த சீஷன் என்பதை யாராலும் உறுதிபட புதிய ஏற்பாட்டின் தகவல்களை கொண்டு நிறுவ இயலாது. குறைந்த பட்சம் இந்த யோவானோடு, அவரது பண்பு நலன்களில் ஒன்றான மொழிநடையிலாவது ஒன்றி வருகிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவோம். யோவானை பொருத்தவரை அவர் ஒரு கலிலேயன், மீனவர், அரமேய மொழியை தாய்மொழியாக கொண்டவர்.
இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். (மத்தேயூ 4:18-21)

    நாம் பைபிலின் மொழிக்குழப்பம் குறித்த தொடரில் அன்றைய காலத்தில், கற்றறிந்த ஜோஸப்ஸ் போன்றவர்களுக்கே கிரேக்க மொழியை கற்பதில் இருந்த சிக்கல்களை விளக்கியிருந்தோம். மீண்டும் அதனை ஒருமுறை நினைவு படுத்தி விட்டு இந்த ஆய்வுப்பகுதியில் நுழைவோம்.
I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods; 
கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சுமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை; ( Antiquities of Jews XX, chapter XI)
    நாம் சென்ற கட்டுரையில் லூக்காவின் சுவிஷேசம் குறித்து பார்க்கையில், கிறித்தவ உலகம் லூக்காவின் சுவிஷேசத்தின் கிரேக்க மொழி நடை, ஏனைய இரு ஒத்தமை சுவிஷேசங்களை விட மேம்பட்டதாக சிலாகித்து கூறிவருகிறது என்று கூறியிருந்தோம். ஜோஸபஸ் போன்றவர்கள் கிரேக்கத்தை கற்கவே பெரும்பாடாய் இருந்த காலத்தில் யோவான் என்ற மீனவன் அதை அன்று கற்றிருந்தார் என்று கூறுவதே நம்பத்தகுந்ததாய் இல்லை. இந்நிலையில் யோவானின் கிரேக்க நடை லூக்காவின் கிரேக்க நடைக்கு ஒப்பாக உள்ளது என்றால், அது எப்படி பட்ட கேலிக்கூத்து. அதைதான் நாம் கீழே காணவிருக்கிறோம். அதாவது சுவிஷேசங்களில், லூக்கா மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தும் சொற்கள் பலவற்றை யோவானில் காணமுடிகிறது. அதன் சிறு பட்டியல்தான் இது.

வ.எண் பயன்படுத்தப்பட்ட
    வார்த்தை
லூக்கா யோவான்
1.
ἀγωνίζομαι
லூக்கா 13:23யோவான் 18:36
2.
ἀντιλέγω
லூக்கா 2:34யோவான் 19:12
3.
ἀδικία
லூக்கா 13:27யோவான் 7:18
4.
αριθμός
லூக்கா 22:3யோவான் 6:10
5.
βαθύς
லூக்கா 24:1யோவான் 4:2
6.
βραχίων
லூக்கா 1:51யோவான் 12:38
7.
γνωστός
லூக்கா 2:44, 23:49யோவான் 18:15,16
8.
ἐκμάσσω
லூக்கா 7:38,44யோவான் 11:2, 12:3
9.
ἐξηγέομαι
லூக்கா 24:35யோவான் 1:18
10.
βάπτω
லூக்கா 16:24யோவான் 13:26
11.
γράμμα
லூக்கா 16:6,7யோவான் 5:47
12.
ἐμπίμπλημι
லூக்கா 1:53யோவான் 6:12
13.
ἐνιαυτός 
லூக்கா 4:19யோவான் 11:49,11:51, 18:13
14.
ἐνώπιον
லூக்கா 24:43 யோவான் 20:30
15.
ἱματισμός
லூக்கா 7:25, 9:29யோவான் 19:24
16.
κόλπος
லூக்கா 6:38 யோவான் 1:18
17.
κυκλόω
லூக்கா 21:20யோவான் 10:24
18.
λαγχάνω
லூக்கா 1:9யோவான் 19:24
19.
λύπη
லூக்கா 22:45யோவான் 16:6
20.
λογίζομαι
லூக்கா 22:37யோவான் 11:50
21.
μηνύω
லூக்கா 20:37யோவான் 11:57
22.
ἐπίκειμαι
லூக்கா 5:1யோவான் 11:38
23.
πράσσω
லூக்கா 3:13யோவான் 3:20
24.
ὀθόνιον
லூக்கா 24:12யோவான் 19:40
25.
μηνύω
லூக்கா 20:37யோவான் 11:57

        இப்படி லூக்காவின் படியான சுவிஷேசத்தின் மேம்பட்ட கிரேக்க நடையின் வார்த்தைகளை யோவானின் படியான சுவிஷேசம் கொண்டிருப்பது இது மீனவ யோவானின் எழுத்துக்கள் அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் இந்த சுவிஷேசம் மிகுந்த இலக்கிய நயம் உடையதாகவும் கூறப்படுகிறது. சுவிஷேசம் எழுதியதாக கூறப்படும் யோவான், 'பவுல்', 'லூக்கா' போன்ற கற்றறிந்த எழுத்தர்களை கொண்டிருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த சுவிஷேசத்தை எழுதிய எழுத்தர் யார் என்பதற்கும் எந்த குறிப்பும் இல்லை. உதாரணமாக ரோமர் 16:22ல் எழுத்தர் யார் என்பது எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இப்படி யார் அந்த இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் என்பதும் தெரியவில்லை. எழுத்தர் குறித்த தகவலும் இல்லை, 

     இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் யார் என்பதில புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று ஆவணங்களும், குழம்பி நிற்கும் நிலையில், அது இயற்றப்பட்டதாக அனுமாகிக்கப்படும் கால அட்டவனையும் உண்மையில் கிறித்தவ உலகம் எவ்வளவு இந்த விஷயத்தில் குழம்பி நிற்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது. அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.580-581 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம். 

c.70-85 A.D.Wittichen, Alford, Reithmayr, Bleek
c.80-90 A.D. Ewald, Godet, Bisping, Westcott, Calmes, Zahn
c.85-95 A.D. Camerlynck
c.90-100 A.D.Mangenot, Batiffol, B. Weiss
c.100 A.D.Lightfoot, Weizsacker, Reynolds, Cornely
After 95 A.D.Harnack
Before 100 A.D.Lepin
c.90-120 A.D. Jackson
c.100-110 A.D. Renan, Schenkel
c.100-125 A.D.O. Holtzmann, J. Réville, Julicher, Loisy, Bauer
c.130-140 A.D. Hilgenfeld, Keim, Thoma, Lutzelberger, A. Réville
c.140-155 A.D. Schwegler, Zeller, Volkmar, Taylor, van Manen, Kreyenbuhl, Schmiedel, Erbe
c. 150 A.D Bretschneider, Schwartz                                                                    
before 135-140 Pfleiderer
c.160-170 A.D Baur, Scholten, Bruno Bauer                                                       

    கி.பி. 70 முதல் கி.பி.170 வரையிலான கிட்டதட்ட 100 ஆண்டுகால இடைவெளியை யோவானின் படியான சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக கிறித்தவ உலகம் கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த கால கருத்தியலுக்கு ஒவ்வொரு அறிஞர்களும் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கொண்டிருப்பார்கள்.

   கிறித்தவ அறிஞர்கள் யார் இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் யோவான் என்று விவாதிப்பதை இங்கு பதிவிட்டால், பக்கங்கள் பத்தாது.  யார் அந்த இயேசுவிற்கு அன்பாய் இருந்த சீடர் என்று அறிய முடியாத நிலையில், மேம்பட்ட கிரேக்க நடையில் இதை அந்த சீடர் சொல்ல சொல்ல எழுதிய அந்த எழுத்தர் யார் என்று யாருக்குமே தெரியாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் என்று கூறப்படும் கூற்றும் கூட உறுதிப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானதாக இருக்கும் நிலையில், இயற்றப்பட்ட காலம் குறித்து கிறித்தவ உலகமே குழம்பி நிற்கும் நிலையில், ஒரு முழு அத்தியாயமும், அந்த “இயேசுவிற்கு அன்பாய் இருந்த சீடர்” என்ற சொற்ப்பிரயோகமுமே இடைச்செருகல் என்று கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையினர் கூறிவரும் நிலையில், இதுவும் ஏனைய நற்செய்தி நூல்களை போன்று இயேசுவின் சீடர் ஒருவரின் பெயரில் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், சுய கற்பனையிலிருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி இயேசுவின் சீடர் ஒருவரின் பெயரில் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.