பக்கங்கள் செல்ல

Saturday, July 6, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

    நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் யார்? யாரின் வழியாக இவர்களது அறிவிப்பை பெற்றார்கள்? இவர்கள் யாரிடம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்? என்று, இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் கிறித்தவ உலகின் நிலை குறித்தும், அந்த எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று ஆவணங்களும், புற ஆதாரங்களும், அதே நற்செய்தி நூல்களின் உள்ளடக்கமும் எவ்வாறு முரண்பட்டு அந்த புற ஆதாரங்களையே பதம் பார்க்கிறது என்பதையும் விரிவாக காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். அந்த வரிசையில் முதலாவதாக வேதம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் மத்தேயூ சுவிஷேசத்தின் அவல நிலையை இங்கு தோழுரிக்கவுள்ளோம்.

     யார் இந்த மத்தேயூ???
    லேவியும் மத்தேயூவும் ஒன்றா?
        ✔அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215)
        ✔குழம்பிப்போன் ஓரிகன் (காலம் கி.பி.185 – 253)
            ☑மத்தேயூவும் லேவியும் ஒன்று என்று கூறும் ஓரிகன்
            ☑மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்
        ✔பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு)
    மொழி குழப்பம்
    யாரும் கண்டிராத இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவம்
    ✅இயற்றப்பட்ட காலம்/ வரிசை: வரலாற்று ஆவணங்கள் கூறுவதும் உள்ளடக்கம் கூறுவதும்
    ✅அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் எழுதப்பட்ட மத்தேயூவின் படியான சுவிஷேசம்    
மத்தேயூ சுவிஷேசம்:
நாம் முன்சென்ற தொடரில் கண்ட வரலாற்று ஆவணங்களின் படியும், தற்கால கிறித்தவ உலகின் நம்பிக்கையின் படியும் புதிய ஏற்பாட்டின் முதலாம் நூலின் ஆசிரியர் மத்தேயூ என்பவராகும். மத்தேயூ சுவிஷேசத்தின் எந்த இடத்திலும் இந்த கருத்து வெளிப்படையாக இடம் பெறவில்லை. இந்த “மத்தேயூ” என்று பிரபலமாக கருதப்படும் இந்த நூலாசிரியர் குறித்தும், அவர் இயற்றியதாக கூறப்படும் மத்தேயூவின் படியான சுவிஷேசத்தின் வரலாற்று ஆவணங்கள், மற்றும் அதன் முரண்கள், சிக்கல்கள் குறித்தும் இங்கு காண்போம். 

    புதிய ஏற்பாட்டின் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் நூலை இயற்றியதாக கூறப்படும் மத்தேயூ, என்பவர் இயேசுவின் சீடராக, இயேசுவை கண்டவராக இருந்தார் என்பது கிறித்தவர்களின் கருத்து. இதற்கு ஆதாரமாக அவர்கள் பின்வரும் வசனங்களை முன்வைக்கின்றனர்.

மத்தேயூ:
    இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மத்தேயூ 9:9-10)

    அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. (மத்தேயூ 10:1-4)
மாற்கு :
    அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மாற்கு 2:13-15)

அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்து என்பவர்களே. (மாற்கு 3:14-19)

லூக்கா: 

    இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். (லூக்கா 5:27-29)

        பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. (லூக்கா 6:13-16)

லேவியும் மத்தேயூவும் ஒன்றா?

மத்தேயூ குறித்து புதிய ஏற்பாட்டில் போதிய தகவல்கள் இல்லாத காரணத்தினால், லேவியும் மத்தேயூவும் ஒன்றுதான் என்று பல காலமாக  திருச்சபை தந்தை முதல் இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள் வரை கதை அளந்து வருகின்றனர்.(1),(2),(3). லேவி என்பவர் மத்தேயூதான் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மத்தேயூவில் மட்டுமே ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் மத்தேயூ என்று அறியப்படுகிறார். மாற்கிலும் லூக்காவிலும் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் லேவி என்று அறியப்படுகிறார். மாற்கில் மேலும் ஒரு கூடுதல் தகவல் இடம் பெறுகிறது ஆதாவது ஆயத்துறையில் அமர்ந்திருந்தவர் "அல்பேயுவின் குமாரன் லேவி" என்ற தகவல் தான் அது. மத்தேயூதான் லேவி என்று வாதிக்க போதிய வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாதிருக்கும் நிலையில், யாக்கோபு தான் லேவி என்று வாதிக்க அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஏன்னென்றால் மாற்கு 3:14-19ல் குறிப்பிடும் போது யாக்கோபை அல்பேயுவின் குமாரன் என்று கூறுகிறார்.  

    மேலும் மாற்கும் லூக்காவும் பெயர் மாற்றத்தை அறியவில்லை என்று வாதிக்க இயலாது. ஓர் இடத்தில் மாற்கும் (மாற்கு 2:13-15)  லூக்காவும்(லூக்கா 5:27-29)  லேவி என்று அழைக்கின்றனர். மற்ற இடத்தில் மத்தேயூ என்று அழைக்கின்றனர். பேதுரு, சீமோன், யாக்கோப் யோவான் ஆகியோரின் பெயர் மாற்றத்தையும், புனை பெயர்களையும் குறிபிட்டு எழுதிய மாற்கும், லூக்காவும், லேவி என்ற பெயர் மத்தேயூ என்று மாற்றப்பட்டது என்பதை குறிப்பிடாததே லேவியும், மத்தேயூவும் வேறு வேறு நபர்கள் என்பதற்கு போதிய சான்று. நாம் மட்டும் இந்த கருத்தை முன்வைக்கவில்லை. கிறித்தவ வரலாற்றிலும், தற்காலம் வரையிலும் இந்த கருத்து முரணை காண முடிகிறது.  

அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215): 

    For all the saved have confessed with the confession made by the voice, and departed. of whom are Matthew, Philip, Thomas, Levi, and many others.

இரட்சிக்கப்பட்ட அனைவரும் குரல் கொடுத்த சாட்சியத்தை ஒப்புக்கொண்டு, புறப்பட்டு சென்றார்கள். அவர்களில் மத்தேயு, பிலிப், தாமஸ், லெவி மற்றும் பலர். (Stromata, Book IV, Chapter IX.—Christ’s Sayings Respecting Martyrdom)

    அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் மத்தேயூவையும், லேவியையும் தனித்தனியாக பிரித்து காட்டுகிறார்.


    So, the Scripture says, "He went out and saw a tax collector named Levi." This man is Matthew the Evangelist. Mark and Luke conceal his name by using his earlier name: whereas Matthew makes his own name known when he says, "He saw Matthew the tax collector."He says this so that we might wonder at the skill of the God who healed him and might believe in [God] fully.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)
      எனவே, "அவர் வெளியே சென்று லேவி என்ற வரி வசூலிப்பவரைக் கண்டார்" என்று வேதம் கூறுகிறது. இந்த மனிதர் மத்தேயு என்ற நற்செய்தியாளர் ஆவார். மாற்கும் லூக்காவும் அவருடைய முந்தைய பெயரைப் பயன்படுத்தி அவரது பெயரை மறைத்துக்கொள்கிறார்கள்: அதேசமயம் மத்தேயு தனது சொந்தப் பெயரைத் தெரியப்படுத்துகிறார், "அவர் வரி வசூலிப்பவரான மத்தேயுவைப் பார்த்தார்" என்று அவர் கூறுகிறார். "அவரைக் ஆற்றிய கடவுளின் திறமையைக் கண்டு நாம் ஆச்சரியப்படவும், கடவுளை முழுமையாக நம்பவும் அவர் இதைச் சொல்கிறார்.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)

மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்:

ὅτι δώδεκα ἀποστόλους ὁ Ἰησοῦς ἐπελέξατο, τελώνην μὲν τὸν Ματθαῖον, οὓς δ' εἶπε συγκεχυμένως ναύτας τάχα τὸν Ἰάκωβον καὶ τὸν Ἰωάννην φησίν, ἐπεὶ καταλιπόντες τὸ πλοῖον καὶ «τὸν πατέρα αὐτῶν Ζεβεδαῖον» ἠκολούθησαν τῷ Ἰησοῦ. Τὸν γὰρ Πέτρον καὶ τὸν ἀδελφὸν αὐτοῦ Ἀνδρέαν, ἀμφιβλήστρῳ χρωμένους διὰ τὰς ἀναγκαίας τροφάς, οὐκ ἐν ναύταις ἀλλ' ὡς ἀνέγραψεν ἡ γραφή, ἐν ἁλιεῦσιν ἀριθμητέον. Ἔστω δὲ καὶ ὁ Λευὴς τελώνης ἀκολουθήσας τῷ Ἰησοῦ• ἀλλ' οὔτι γε τοῦ ἀριθμοῦ τῶν ἀποστόλων αὐτοῦ ἦν εἰ μὴ κατά τινα τῶν ἀντιγράφων τοῦ κατὰ Μάρκον εὐαγγελίου. Τῶν δὲ λοιπῶν οὐ μεμαθήκαμεν τὰ ἔργα, ὅθεν πρὸ τῆς μαθητείας τοῦ Ἰησοῦ περιεποίουν ἑαυτοῖς τὰς τροφάς.

……….. that Jesus selected twelve apostles, and that of these Matthew alone was a publican; that when he calls them indiscriminately sailors, he probably means James and John, because they left their ship and their father Zebedee, and followed Jesus; for Peter and his brother Andrew, who employed a net to gain their necessary subsistence, must be classed not as sailors, but as the Scripture describes them, as fishermen. And Levi also, who was a follower of Jesus, may have been a publican; but he was not of the number of the apostles, except according to a statement in one of the copies of Mark's Gospel. (Origen, Against Celsus , Book 1, Chapter LXIII)

…….. இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார், மேலும் இவர்களில் மத்தேயு மட்டும் ஆயக்காரராக இருந்தார்; அவர் அவர்களை வேறுபடுத்தாமல் மாலுமிகளே என்று அழைக்கும்போது, அவர் ஜேம்ஸ் மற்றும் யோவானை குறிப்பிடுவதாக இருக்கக்கூடும், ஏனென்றால் அவர்கள் தங்கள் கப்பலையும் தங்கள் தந்தை செபதேயுவையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்; ஏனெனில், பீட்டரும் அவருடைய சகோதரர் ஆண்ட்ரூவும், தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற வலையைப் பயன்படுத்தியவர்கள், வேதம் அவர்களை மாலுமிகள் என்று அல்ல, மாறாக மீனவர்கள் என்று விவரிக்கிறது. இயேசுவின் சீடராக இருந்த லேவியும் ஆயக்காரராக இருந்திருக்கலாம்; ஆனால் அவர் மாற்கு நற்செய்தியின் பிரதிகளில் ஒன்றில் கூறப்பட்டுள்ளதைத் தவிர, அப்போஸ்தலர்களின் எண்ணிக்கையில் இல்லை.(Origen, Against Celsus , Book 1, Chapter LXII)

    மாற்கின் பிரதிகள் ஒன்றில் லேவியும் சீடராக இடம் பெற்றிருந்தார் என்று ஓரிகன் கூறுவது, எழுத்துப்பிரதிகளிலேயே இடம் பெறும் அளவிற்கு இந்த முரண் பரவலாக இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு):

    Matthew the Evangelist was from Nazareth, of the tribe of Issachar. He preached in Palestine, Tyre and Sidon, and went as far as Gabbulla. He died and was buried in Antioch, a city of Pisidia...........  Levi was slain by Charmus , while he was teaching in Paneas.

    நற்செய்தியாளர் மத்தேயு நாசரேத்தைச் சேர்ந்தவர், இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் பாலஸ்தீனம், டயர் மற்றும் சிடோன் ஆகிய இடங்களில் பிரசங்கித்தார், மேலும் கப்புல்லா வரை சென்றார். அவர், பிசிடியாவின் நகரமான அந்தியோக்கியாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.............லேவி பனியாஸில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, சார்மஸால் கொல்லப்பட்டார்.  (Kṯāḇā ḏ-debboriṯā by Solomon of Akhlat Translation : The book of bee by Sir Ernest Alfred Thompson Wallis Budge P.No.106- 112). 
    பஸ்ராவின் பிஷப் சாலமோனை பொறுத்தவரையில் மத்தேயூவும், லூக்காவும் வேறு வேறு. அவர்கள் இறந்த இடமும் வேறு. மத்தேயூ இறந்த இடம் குறித்தும் கிறித்தவ வரலாற்றில் குழப்பமே நிலவுகிறது என்பது கூடுதல் தகவல். 

    தற்கால கிறித்தவ இறையியலாளரான ரிச்சர்ட் பொக்காம் (Richard Bauckham)  தனது நூலில் இது குறித்து கூறுகையில் மத்தேயூவும் லேவியும் ஒன்றல்ல என்ற முடிவிற்கே வருகிறார். (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). மேற்குறிபிட்ட செய்திகள் நமக்கு ஒன்றை படம் பிடித்து காட்டுகிறது. அதாவது யார் மத்தேயூ என்பதில் கூட குழப்பம் நீடித்துள்ளது, நீடிக்கிறது என்பதை. கிறித்தவ மிசனரிகள் மத்தேயூதான் முதல் சுவிஷேசத்தை எழுதினார் என்பதற்கு ஆதாரம் அதனை ஆதிகால கிறித்தவ சபைகள் அனைத்தும் ஏற்றிருந்ததே ஆகும் என்று கூறி வருகின்றன. இப்படி பலராலும் பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுவிஷேசத்தின் ஆசிரியரின் வரலாற்றின் அவல நிலைதான் மேலே காட்டப்பட்டுள்ளது. உண்மையில் இதனை ஆதிகால அனைத்து சபைகளும் அறிந்திருக்கும் பட்சத்தில், மத்தேயூ குறித்த தகவல்கள் வரலாற்றில் குழப்பம் இன்றி பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு நேர் முரணான நிலையை இங்கு காணமுடிகிறது. இது “மத்தேயூவின் படியான சுவிஷேசம்” என்ற தலைப்பே இடைக்கால இடைச்செருகல் என்பதை தெளிவாக காட்டுகிறது. 

    Thus this Evangelist has appropriated Mark’s story of the call of Levi, making it a story of Matthew’s call instead, but has not continued this appropriation by setting the following story in Matthew’s house. He has appropriated for Matthew only as much as Mark’s story of Levi as he needed. If this explanation of the name Matthew in Matt 9:9 is correct, it has one significant implication: that the author of Matthew’s Gospel intended to associate the Gospel with the apostle Matthew but was not himself the apostle Matthew. Matthew himself could have described his own call without having to take over the way Mark described Levi’s call.

    இவ்வாறு, இந்த சுவிசேஷகர், லெவியின் அழைப்பைப் பற்றிய மார்க்கின் கதையை பொருத்தியுள்ளார், அதற்கு பதிலாக அதை மத்தேயுவின் அழைப்பின் கதையாக மாற்றியுள்ளார், ஆனால் அதன் பின்வரும் மத்தேயுவின் வீட்டில் இடம் பெறும் கதையில் இந்த பொருத்தலை  தொடரவில்லை. மத்தேயுவுக்குத் தேவையான அளவு மட்டுமே மார்க்கின் லெவியின் கதையை  பொருத்தியுள்ளார். மத்தேயு 9:9 இல் உள்ள மத்தேயு என்ற பெயரின் இந்த விளக்கம் சரியானது என்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க உட்கருத்தை கொண்டுள்ளது: மத்தேயுவின் நற்செய்தியின் ஆசிரியர், அப்போஸ்தலன் மத்தேயுவுடன் சுவிசேஷத்தை இணைக்க விரும்பியுள்ளார், ஆனால் அவர் அப்போஸ்தலன் மத்தேயு அல்ல. லெவியின் அழைப்பை மார்க் விவரித்த விதத்தை எடுத்துக் கொள்ளாமல் மத்தேயூ தனது சொந்த அழைப்பை விவரித்திருக்கலாம்.((Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). 

    அதாவது சுவிஷேசத்தை எழுதியது அப்போஸ்தலன் மத்தேயூ அல்ல. மத்தேயூ விவரித்ததை, யார் என்று அறியப்படாத அந்த எழுத்தாளர் மாற்கின் சரக்கில் இடைசெருகல் செய்திருக்கிறார் என்று கூறுகிறார். லேவி-மத்தேயூ இருவேறாக இருந்தால் அதுவே மத்தேயூ சுவிஷேசம் அப்போஸ்தலன் மத்தேயூவினால் எழுதப்படவில்லை என்பதற்கு போதிய சான்று என்பது அவரது வாதத்தின் சாரம். மேலும் பாப்பியஸிற்கு முற்பட்ட எந்த சர்ச் பிதாவும் மத்தேயூ என்ற பெயரிடப்பட்ட சுவிஷேசம் இருப்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


        மத்தேயூவின் படியான சுவிஷேசத்தை பொறுத்த வரையில் கூறப்படும் வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும், மத்தேயூவின் மூல மொழி எபிரேயம் என்று வாதிக்கின்றன. நாம் சென்ற தொடரில், இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் மூல மொழி எபிரேயம் அல்ல, மாறாக அது இயற்றப்பட்டத்தே கிரேக்கத்தில் தான் என்பதற்கு கிறித்தவ உலகம் முன்வைக்கும் ஆதாரங்கள் சிலவற்றை முன்வைத்திருந்தோம். “இம்மானுவேல்”, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, போன்ற  சொற்கள் அனைத்தும் எபிரேய சொற்கள்,  ஆனால் அவற்றை எல்லாம் மொழியாக்கம் செய்துள்ளனர். மத்தேயூவின் படியான சுவிஷேசம் உண்மையில் எபிரேயம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டிருந்தால் அவற்றை மொழியாக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் கிரேக்கம் பேசும் மக்களுக்காக கிரேக்கத்தில் எழுதப்பட்டது. 

    இதனை உறுதி படுத்தும் விதமாக ஜெரோமும் “மத்தேயூவின் படியான சுவிஷேசம் யாரோ அட்ரஸ் இல்லாதவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது” என்று கூறுகிறார். இதனை உறுதி படுத்தும் விதமாக “மத்தேயு எபிரேய மொழியில் [கர்த்தரின்] அற்புதங்களை ஒன்றாக தொகுத்தார், மேலும் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்தவரை அவற்றை விளக்கினர்.” என்று பாப்பியஸும் கூறுவதாக யூஸிபியஸும் உறுதிபடுத்துகிறார். எனவே மத்தேயூவின் சுவிஷேசத்தை மொழிப்பெயர்த்தவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது மத்தேயூவின் படியான சுவிஷேசம் என்று தலைப்பிட்டு அதனை எழுதியவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
(லிங்க் இணைக்கப்பட வேண்டும்)……. 


மேலும் இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவத்தை யாரும் வரலாற்றில் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. நாம் முன்சென்ற  கட்டுரையில் ஜெரோம் எபிரேய மத்தேயூவின் சுவிஷேத்தை கண்டதாக கூறியுள்ளார் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அது குறித்த சிறு தெளிவை இங்கு முன்வைக்கிறோம் ஜெரோம் கண்டதாக கூறும் நசரேயர்களின் மத்தேயூ சுவிஷேசத்திற்கும், இன்றிருக்கும் மத்தேயூவின் சுவிஷேசத்திற்கும் கொள்கை முரண்களே உண்டு.  அதுபோல பல வசனங்களும் வேறுபட்டு உள்ளன. உதாரணமாக 

இன்றிருக்கும் மத்தேயூவின் படியான சுவிஷேசம்
  அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.( மத்தேயூ 18:21-22)

எபிரேய மத்தேயூவின்  சுவிஷேசம்            அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் "தீர்க்கதரிசிகளில் கூட, அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும், பாவத்தின் வார்த்தை காணப்பட்டது." என்று உனக்குச் சொல்லுகிறேன் (எம்.எஸ்.எஸ் 566, 899)

    மேற்குறிபிட்ட ஜெரோமின் கூற்றை பின்வரும் வரலாற்று செய்தி தெளிவுபடுத்துவதாய் உள்ளது. அதாவது ஸலாமிஸின் எபிஃபேனியஸ் ஜெரோமின் சமகாலத்தவர் ஆவார் (கி.பி. 320 – 403). இவர் ஜெரோம் கண்டதாக கூறும் எபிரேய மத்தேயூ குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
13,1 But I shall resume the thread of my argument against Ebion— because of the Gospel according to Matthew the course of the discussion obliged me to insert the whole of the knowledge which I had gained. (2) Now in what they call a Gospel according to Matthew, though it is not the entire Gospel but is corrupt and mutilated—and they call this thing “Hebrew”!—( Epiphanius, Panarion, 30, 13, 1-2)

13,1 ஆனால் எபியோனுக்கு எதிரான எனது வாதத்தின் இழையை மீண்டும் தொடர்கிறேன் - மத்தேயுவின் படியான நற்செய்தியின் காரணமாக, விவாதத்தின் போக்கில் நான் பெற்ற அறிவை முழுவதுமாக நுழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (2) இப்போது அவர்கள் மத்தேயுவின்படி ஒரு சுவிசேஷம் என்று அழைக்கிறார்கள், அது முழு நற்செய்தியாக இல்லாவிட்டாலும், அது சிதைந்ததாகவும், சிதைக்கப்பட்டதாகவும் இருக்கிறது - மேலும் அவர்கள் இதை "ஹீப்ரு" என்று அழைக்கிறார்கள்! ”!( Epiphanius, Panarion, 30, 13, 1-2)
    இப்படி மாறுபட்ட, சிதைக்கப்பட்ட எபிரேய மத்தேயூவை பார்த்துதான் ஜெரோம் உண்மை எபிரேய மத்தேயூவை கண்டதாக கதை விடுகிறார். மேலும் ஜெரோமே பல இடங்களில் அதில் இருந்த, தற்போதைய மத்தேயூவில் இருந்து மாறுபட்டு இருக்கும் வசனங்களை தனது ஆக்கங்களில் கூறியும் இருக்கிறார். எனவே யாரும் மூல மத்தேயூ சுவிஷேசத்தை கண்டதில்லை. கண்டதாக கூறிய ஜெரோமும் மாறுபட்ட எபிரேய மத்தேயூவைதான் கண்டிருக்கிறார். இன்றிருக்கும் கிரேக்க மத்தேயூவின் எபிரேய வடிவத்தை அல்ல.

    இப்படி மூல ஆவணத்தை மேலே குறிபிட்டுள்ள யாரும் கண்டதாகவும் எந்த தகவலும் இல்லை. பாப்பியஸ் முதற்கொண்டு மத்தேயூவின் படியான சுவிஷேசத்திற்கு யாரும் நேரடி சாட்சிகள் அல்ல. அப்போஸ்தலிக்க பிதாக்களில் இறுதி கால பகுதியான கி.பி. 2ம் நூற்றாண்டை சார்ந்த பாப்பியஸ்தான் மத்தேயூ சுவிஷேசம் இருந்ததற்கான முதல் சாட்சி. அவரும் நேரடியாக இயேசுவின் சீடர்கள் யாரையும் சந்தித்திருக்கவில்லை. மேலும் இன்றுவரை இந்த வரலாற்று குறிப்புக்களை உறுதி செய்யும் படியாக கிரேக்க மத்தேயூ எழுத்துப்பிரதிக்கு முற்பட்ட எபிரேய மத்தேயூ எழுத்துப்பிரதிகள் எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மத்தேயூ சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மத்தேயூ சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது. A Critical and Exegetical Commentary on the Gospel according to Saint Matthew. Written by W.D. Davies and Dale C. Allison (P.No.127-128) என்ற மத்தேயூ சுவிஷேசத்தின் விளக்கவுரையில் இருந்து அது இயற்றப்பட்ட காலம் குறித்து எத்துனை கருத்து நிலவுகிறது என்பதை காணத்தருகிறோம்.

(1) Scholarly opinion:  The spectrum of opinion concerning the dating of Matthew's gospel may be illustrated as follows:


A.D. 40-50 H. Grotius
A.D. 50-60 M. Meinertz, J. A. T. Robinson
A.D. 50-64 B. Reicke
ca. A.D. 60 G. Maier
before A.D. 63 R. H. Gundry
A.D. 60-70 F. Godet, W. Michaelis
A.D. 65-75 W. C. Allen
before A.D. 70 C.F.D. Moule (tentatively), E. E. Ellis
A.D. 70-110 K. Stendahl, A. Wikenhauser, P. S. Minear
A.D. 70-75  A. von Harnack
A.D. 70-80 J. Weiss, W. Sanday, W. R. Farmer
before A.D. 75 A. Plummer
ca. A.D. 80 D. Hare
A.D. 80-100
E. Renan, T. Zahn (in Greek), F. C. Burkitt, B. W. Bacon, A. H. McNeile, C. G. Montefiore, F. V. Filson, G. Bornkamm, R. Walker, D. Hill, R. H. Fuller, W. Marxsen, W. G. Kümmel, E. Schweizer, J. D. Kingsbury, R. E. Brown
A.D. 80-90 P. Bonnard, W. Grundmann, J. P. Meier, U. Luz
ca. A.D. 85 B. H. Streeter
A.D. 85-105 J. C. Fenton
ca. A.D. 90  E. Lohse
A.D. 90-100  E. von Dobschütz, C. D. Kilpatrick
A.D. 90-5 G. Strecker
ca. A.D. 100  M. S. Enslin, F. W. Beare
after A.D. 100  F. C. Baur, O. Pfleiderer, H. J. Holtzmann, A. Loisy, H. von Sode

    மேற்குறிபிட்ட கிபி 40 முதல் கி.பி 110 வரை சுழலும் அட்டவணையை காணும்யாரும் சொல்வார்கள், "22 கருத்துக்களில், பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்கள் கி.பி.70 க்கு பிறகுதான் மத்தேயூவின் படியான சுவிஷேசம் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர்" என்று. இந்த கருத்தை மேலும் உறுதிபடுத்தும் விதமாக அதன் உள்ளடக்கம் அமைந்துள்ளது. மேலும் மாற்கு சுவிஷேசம் தான் முதலில் எழுதப்பட்டது என்பது இன்றைய கிறித்தவ அறிஞர்களில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
    The theory of Markan priority, although not uncontested, continues to be held by a majority of scholars today, the present author included.
    மாற்கு முதன்மை கோட்பாடு, போட்டியற்றதாக இல்லாவிட்டாலும், தற்போதைய ஆசிரியர் உட்பட இன்று பெரும்பான்மையான அறிஞர்களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவதாகும்,. (The Gospel According To Mark , By James R. Edwards, Introduction, History Of The Interpretation Of Mark )
    மேற்குறிபிட்டதற்கு முரணாக மத்தேயூ சுவிஷேசம் தான் ஏனைய சுவிஷேத்தை விட முதலில் இயற்றப்பட்டதாக வரலாற்று கூற்றுக்கள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால் அதன் உள்ளடக்கம் பெரும்பாலான தற்கால கிறித்தவ அறிஞர்களின் கூற்றையே உறுதிபடுத்துகிறது. அதாவது மத்தேயூ, மாற்கு சுவிஷேசத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதை உறுதி படுத்துகிறது. இதனை சென்ற தொடரில் கண்டோம். அந்த ஆய்வின் முடிவினை முன்னிறுத்தி மேற்கூறிய வரலாற்று கூற்றுக்களை சற்று ஆய்வு செய்வோம்.
✅மாற்கின் 661 வசனங்களில் 641 வசனங்களை மத்தேயூ கொண்டிருக்கிறது. மாற்கின் 14:36 அப்பா என்ற அரமேய சொல் Αββα என்று கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு(Transliterate) செய்யப்பட்டு பிறகு அது கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டோம். மத்தேயூ மாற்கில் இருந்து எழுதப்பட்டதால்தான், மத்தேயூ 26:39ல் நேரடியாக கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மத்தேயூவில் இருந்து மாற்கு காப்பியடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. அல்லது மத்தேயூ மாற்கிற்கு முன்பாக எழுதப்படவில்லை என்பதை உறுதி படுத்துகிறது. 
✅மத்தேயூவும், லூக்காவும், ஒரு சேர மாற்கின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பின்பற்றியுள்ளமை. மத்தேயூவும், லூக்காவும், முரண்படும் தருணங்களிலும் கூட இரண்டில் ஒன்று மாற்கின் நிரலையே பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
✅மேற்குறிபிட்டது போல இன்னும் பல காரணங்கள், மத்தேயூவின் உள்ளடக்கம் அது மாற்கில் இருந்துதான் எழுதப்பட்டது என்பதை உறுதிபடுத்தும் நிலையில், மாற்கில் இருந்து மத்தேயூ எழுதப்பட்டிருந்தால் இன்னொரு சிக்கல் இங்கு உருவாகிறது. அதாவது மத்தேயூ உண்மையில் ஏசுவின் சீடர் என்றால், ஏன் ஏசுவின் சீடாரான பீட்டரின் கூற்றுக்களை தாங்கி நிற்ப்பதாக கூறப்படும் பீட்டரின் சீடரான மாற்கின் நூலை காப்பியடிக்க வேண்டும். 
✅மேலும் பேதுரு, மத்தேயூ ஆகியோரது மரணத்திற்கு பிறகே மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதாக ஐரினியஸ் கூறுகிறார். நிலை இப்படி இருக்கையில் மத்தேயூவின் சுவிஷேசம் மாற்கில் இருந்து எழுதப்பட்டிருந்தால், நிச்சயம் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் ஏசுவின் சீடர் மத்தேயூவினால் எழுதப்பட்டது அல்ல. 
✅இதை எல்லாம் விட முத்தாய்ப்பாக அனைத்து வரலாற்று ஆவணங்களும் மத்தேயூ நேரடியாக எழுதியதாக கூறும் போது தற்போதைய நூல் மத்தேயூவின் கூற்றின் படியான நூல் என்ற தலைப்பை கொண்டிருப்பது, யாரோ அடரஸில்லாத ஒருவர், மத்தேயுவின் பெயரை பயன்படுத்தி, முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி எழுதிய நூலாகத்தான் இன்றைய மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் உள்ளது என்பது உறுதியாகிறது. யார் அந்த அட்ரஸில்லாத எழுத்தர் என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை.  
    எனவே யார் மத்தேயூ என்று சரியாக அறியப்படாத நிலையில், எபிரேய மூல மத்தேயூவை யாரும் கண்டிராத நிலையில், மொழியியல் ரீதியாக இன்றைய மத்தேயூ வரலாற்று ஆவணத்திற்கு முரணாக கிரேக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது என்ற நிலையில், மத்தேயூ சுவிஷேம் எழுதப்பட்ட காலம் எது என உறுதியாக அறியப்படாத நிலையில், மத்தேயூ சுவிஷேசம், மத்தேயூ உள்ளிட்ட சீடர்கள் இறந்த பிறகு எழுதப்பட்ட மாற்கு சுவிஷேசத்தில் இருந்துதான் காப்பி அடிக்கப்பட்டது என்ற நிலையில், “மத்தேயூ சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மத்தேயூவின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.  

No comments:

Post a Comment