பக்கங்கள் செல்ல

Sunday, July 28, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக லூக்காவின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் கிரேக்க மொழியியலில் பெரிதும் பண்பட்ட வடிவத்தை லூக்காவின் படியான நற்செய்தி நூல் தாங்கி நிற்பதாக கிறித்தவ உலகத்தால் கூறப்படுகிறது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் லூக்காவின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம்.

 


    இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் லூக்கா என்பது கிறித்தவ உலகின் நம்பிக்கை. ஏனைய நற்செய்தி நூல்களை போலவே இந்த நூலிலும் இந்த நூலின் ஆசிரியர் தன்னை எந்த இடத்திலும் வெளிக்காட்டவில்லை. ஆனால் ஏனைய நற்செய்தி நூலில் இருந்து இந்த நூல் ஒரு வேறுபாட்டை கொண்டுள்ளது. உதாரணமாக மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் மத்தேயூ எனும் ஏசுவின் சீடரால எழுதப்பட்டது என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. அந்த கூற்றின் அவல நிலையை நாம் சென்ற தொடரில் விரிவாக கண்டிருந்தோம். கிறித்தவர்களின் அத்தகைய பூச்சு வேலைக்கெல்லாம் இடம் தராதவாறு இந்த நூலின் ஆசிரியரே இந்த நற்செய்தி நூலை தாம் விசாரித்துதான் எழுதியதாக சுயவாக்குமூலம் அளித்துள்ளார்.
    மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.  (லூக்கா 1:1-4)

    மேலும் இந்த ஆசிரியர் குறித்து கிறித்த உலகம் இன்னொரு நம்பிக்கையையும் கொண்டுள்ளது. அதாவது இந்த லூக்காதான், அப்போஸ்தல நடபடிகள் என்ற நூலையும் இயற்றியதாக கூறிவருகிறது. அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனம் முன்வைக்கப்படுகிறது

    தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். (அப்போஸ்தல் நடபடிகள் 1:1-2)

    எனவே இவ்விரு நூல்கள் குறித்து ஒன்றாக இந்த கட்டுரையில் கண்டுவிடுவோம். “இந்த சுவிஷேசத்தை எழுதிய லூக்கா, பவுலிற்கு நெருக்கமான துணைவர் ஆவார்” என்பது இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் குறித்து கிறித்தவ உலகம் கூறிவருவதாகும். லூக்கா என்ற பெயரானது Loukanos (=Latin Lucanus)-லூக்கன், Loukianos (=Lucianus)-லூக்கியான், Loukios or Leukios(=Lucius)- லூகி, Loukillios (=Lucilius)- லூகிலி போன்ற இலத்தின் பெயரின் கிரேக்க சுருக்கமாகும்.( P.No. 42, The Gospel According to LUKE, Introduction, Translation, and Notes by JOSEPH A. FITZMYER, SJ. ). உதாரணமாக அப்போஸ்தல நடபடிகள் 15:40ல் பவுலின் கூட்டாளிகளில் ஒருவராக “σιλαν- சிலா” என்பவர் அறியப்படுகிறார். அவரே பவுலின் கடிதங்களில் ஒன்றான 1 தெசலோனிக்கேயர் 1:1ல் “σιλουανος – சில்வான்” என்று அறியப்படுகிறார். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் கிரேக்க பெயர் சுருக்கம் கொண்ட லூக்கா என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.

என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14)
    ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். (2 தீமோத்தேயு 4:10-11)
    கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (பிலேமோன் 1:23-24)

📜அப்போஸ்தல நடபடிகளில் பவுலின் துணைவராக லூக்காவின் ஆசிரியர்- "நாம் பத்திகள்"

    துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.(அப்போஸ்தல நடபடிகள் 16:11-14)
    இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். (அப்போஸ்தல நடபடிகள் 20:5-7)
நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். (அப்போஸ்தல நடபடிகள் 28:16)

    மேற்குறிபிட்ட வசனங்களில் "நாங்கள்", "எங்கள்" போன்ற வார்த்தை பிரயோகங்கள் அப்போஸ்தல் நடபடிகளை எழுதியவர் பவுலின் கூட்டாளிகளில் ஒருவர் என்பது கிறித்தவர்களின் வாதம் 

🎯புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அதில் இருக்கும் சிக்கல்களும்:

    லூக்கவின் படியான சுவிஷேசத்திலும், அப்போஸ்தல நடபடிகளிலும் எந்த இடத்திலும் “லூக்காவாகிய நான்” என்ற சொற்றொடர் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. யாருக்கு எழுதுகிறோம் என்பதை தெளிவாக பதிபித்தவர், யார் எழுதுவது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    முன்சென்ற கட்டுரைகளில் நற்செய்தி நூல்களின் ஆசிரியர் குறித்த தகவல்களில் எப்படி குளறுபடிகள் இருந்தனவோ அதே நிலைதான் இந்த நற்செய்தி நூலிற்கும். கிறித்தவர்கள் கூறிவருவது போல ஒரே ஒரு லூக்காதான் பவுலின் துணைவராக இருந்தாரா என்றால் அதுதான் இல்லை. பவுலிற்கு லூக்கா கிரேக்க பெயர்சுருக்கம் கொண்ட துணைவர்கள் இருவர் இருந்ததாக பவுலின் கடிதங்கள் கூறுகின்றன. அதில் ஒருவர் யூதரல்லாதவர். மற்றவர் யூதர்.

    என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14).
    அதாவது கொலோசெயர் 4:10-14ல்  குறிப்பிடப்படும்  பவுலின்கூட்டாளிகளில் அரிஸ்தர்க்கு, மாற்கு,யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் ஆகியோர் மட்டுமே விருத்தசேதனம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது யூதர்கள் என்று கூறுகிறது. லூக்காவும், தேமாவும் அந்த லிஸ்டில் இல்லை. அதாவது அவர்கள் யூதரல்லாதவர் என்று கூறப்படுகிறது  கொலோசெயர் 4:10-14ல்.

ασπαζονται υμας τιμοθεος ο συνεργος μου και λουκιος και ιασων και σωσιπατρος οι συγγενεις μου

Timothy, my fellow worker, greets you, as do Lucius, Jason, and Sosipater, my fellow Jews.

என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.(ரோமர் 16:21)
    மேலே குறிப்பிடம் படும் λουκιος- லூகி தன் இனத்தான் என்று பவுல் அடையாளப்படுத்துகிறார். லூக்கா என்ற சுருக்கப் பெயர் லூகி என்ற பெயரையும் குறிக்ககூடியது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே கண்டிருந்தோம். λουκιος- லூகி என்ற பெயரின் சுருக்கமும்  λουκας-லூக்கா தான் என்பதை அடல்ஃப் டைஸ்மென் என்பவர் பண்டைய கிழக்கு குறித்த தனது நூலில் கல்வெட்டுக்களை ஆதாரமாக கொண்டு விளக்குகிறார். A. Deissmann,  அவர்களது Light from the Ancient East P.No.436ல் பின்வருமாறு கல்வெட்டுக்களை ஆதாரமாக கொண்டு பதிவுசெய்துள்ளார்


    அதாவது முதல் கல்வெட்டில் லூகி என்று கூறப்படுபவர், இரண்டாம் கல்வெட்டில் லூக்கா என்று அழைக்கப்படுகிறார் என்று டைஸ்மேன் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளார். பெயர் சிக்கலுக்கான தீர்வை கண்டுவிட்டதாகவும் கூறுகிறார். நாம் மேலே குறிப்பிடும் இந்த கருத்து வினோதமான கருத்து அல்ல மாறாக ஓரிகன் காலத்திலேயே (கி.பி. 185 – 253) யார் இந்த லூக்கா என்பதில் குழப்பம் நிலவி வந்துள்ளது.
6. Moreover, some maintain that this very Lucius is Luke, who wrote the Gospel, since it is customary for names to be given sometimes in accordance with the native declensions, sometimes even according to the Greek or Roman declension.

6.மேலும், இந்த லூசியஸ் நற்செய்தியை எழுதிய லூக்கா என்று சிலர் நம்புகிறார்கள், ஏனெனில் சில சமயங்களில் பூர்வீக உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் ,சில சமயங்களில் கிரேக்க அல்லது ரோமானிய உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் கூட பெயர்கள் வழங்கப்படுவது வழக்கம்,. .(ORIGEN COMMENTARY ON THE EPISTLE TO THE ROMANS BOOKS 6–10, Commentary on verse 16:21, P.NO.304)
    மேலே கூறப்பட்ட தரவுகள் அடிப்படையில் லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதியது யூத லூக்காவா அல்லது யூதரல்லாத லூக்காவா என்பதில் பல நூற்றாண்டுகளாக கிறித்தவ உலகில் குழப்பம் நிலவி வருவது அம்பலமாகிறது.


    மேற்குறிபிட்ட இந்த குழப்பமான நிலையை எதிர் கொள்ள ரெவரண்ட் வில்லியம் கிர்க் ஹோபர்ட் என்பவர் ஒரு நூலை வெளியிட்டார். லூக்காவை, பவுல் கொலோசெயர் 4:14ல் குறிப்பிடும் போது வைத்தியன் என்று குறிப்பிடுகிறார். இதை அடிப்படையாக கொண்டு ரெவரண்ட் வில்லியம் கிர்க் ஹோபர்ட் அவர்கள் லூக்காவின் சுவிஷேசம் மற்றும் அப்போஸ்தல நடபடிகளில் இருக்கும் மருத்துவ வார்த்தைகள் குறிப்பிட்டு காட்டி “The Medical Language Of St. Luke: A Proof From Internal Eviidence That “The Gospel According To St. Luke” And The Acts Of The Apostles” - Were Written By The Same Person, And That The Writer Was A Medical Man.” என்ற நூலை 1882ல் வெளியிட்டார். அதில் கிட்டதட்ட 400 வார்த்தைகளை பட்டியலிட்டு, லூக்கா ஒரு மருத்துவர் எனவே கொலோசெயர் 4:14ல் பவுலால் கூறப்படும் அந்த லூக்காதான், லூக்காவின் படியான சுவிஷேசத்தை இயற்றியவர் என்று வாதிட்டார்:
    The purpose of this work is to show, from an examination of the language employed in the third Gospel and the Acts of the Apostles, that both are the works of a person well acquainted with the language of the Greek Medical Schools a fact which, if established, will strongly confirm the belief that the writer of both was the same person, and was the person to whom they have been traditionally assigned by the Church , who is mentioned by St. Paul (Coloss. iv. 14) as “Luke, the beloved Physician”— an identity which some have doubted or denied.

    இந்த உருவாக்கத்தின் நோக்கம், மூன்றாம் நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர்களின் நடபடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியைப் பரிசோதிப்பதன் மூலம், இரண்டும் கிரேக்க மருத்துவப் பள்ளிகளின் மொழியை நன்கு அறிந்த ஒரு நபரின் படைப்புகள் என்பதைக் காட்டுவதாகும். அது நிறுவப்பட்டால், இரண்டையும் எழுதியவர் ஒருவரே என்றும்,  சிலரால் மறுக்கப்பட்ட அல்ல சந்தேகிக்கப்பட்ட அடையாளமான,  புனித பவுலால் பிரியமான வைத்தியனாகிய லூக்கா என்று கொலோசெயர் 4:14ல் கூறப்பட்டு, திருச்சபையால் பாரம்பரியமாக அவற்றிற்கு சூட்டப்பட்டவர் என்ற நம்பிக்கையை வலுவாக உறுதிப்படுத்தும், (“P.No.XXIX , The Medical Language of St. Luke: A Proof from Internal Evidence that “The Gospel According To St. Luke” And The Acts of  The Apostles” - Were Written By The Same Person, And That The Writer Was A Medical Man.” )
        இந்நிலையில் HENRY J. CADBURY, என்ற ஹார்வர்ட் இறையியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் புதிய ஏற்பாட்டு அறிஞர் 1920ல் THE STYLE AND LITERARY METHOD OF LUKE என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

     Plummer has pointed out that of Hobart’s long list of words: “More than eighty per cent are found in LXX, mostly in books known to St. Luke, and sometimes occurring very frequently in them. In all such cases it is more reasonable to suppose that Luke’s use of the word is due to his knowledge of LXX, rather than to his professional training. . . . If the expression is also found in pro-fane authors, the chances that medical training had anything to do with Luke’s use of it become very remote. It is unreasonable to class as in any sense medical such words as ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις, etc., etc. All of these are frequent in LXX, and some of them in profane authors also.”

    The figures for Josephus are no lower. From Krenkel’s lists ” it appears that of the 400 words in Hobart’s index about 300 occur in both LXX and Josephus, 27 in LXX but not in Josephus, while 67 are in Josephus but not in LXX.* So that Josephus, who as a single author makes a fair parallel to Luke, uses ninety per cent of the ‘medical words” listed by Hobart. A comparison of Hobart’s list with the lexica of two profane authors of the same period, Plutarch and Lucian,” shows that over ninety per cent of the list is found in one or both of these two authors. Of the remaining thirty or forty words few seem to have any strikingly medical signification in Luke. It is clear, therefore, that Hobart’s list contains very much that is without significance, many of his words being common words with-out any special medical use. While he shows most diligently that the words he catalogues are employed by the medical writers, he, does not show that they are not employed by other writers with no professional training. Even those who accept his argument realize this. ‘He has proved only too much,” says Harnack

    ஹோபர்ட்டின் நீண்ட சொற்களின் பட்டியலை பிளம்மர் சுட்டிக்காட்டி “LXXல் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானவை காணப்படுகின்றன, அவை பெரும்பாலும் புனித லூக்காவிற்கு தெரிந்த புத்தகங்களில், சில சமயங்களில் அடிக்கடி இடம்பெறுபவை. இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், லூக்காவின் இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது தொழில்முறை பயிற்சிக்கு பதிலாக, LXX பற்றிய அவரது அறிவின் காரணமாகும் என்று கருதுவது மிகவும் நியாயமானது……. இந்த வரிவடிவங்கள் சாதரண எழுத்தர்களிடமும் காணப்படுமானால், மருத்துவப் பயிற்சிக்கும், லூக்கா அதைப் பயன்படுத்தியதற்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις இன்னும் பலசொற்களை, எந்த வகையிலும் மருத்துவத்திற்கு உரியது என வகுப்பது நியாயமற்றது. இவை அனைத்தும் LXXலும் சாதாரண எழுத்தர்களி (ஆக்கங்களி)லும் அடிக்கடி இடம்பெறுகின்றன,” என்று கூறுகிறார்.

    ஜோசஃபஸ்ஸிற்கான புள்ளிவிவரங்களும் குறைவாக இல்லை. கிரென்கெலின் பட்டியல்களிலிருந்து ஹோபார்ட்டின் அட்டவணையில் உள்ள 400 சொற்களில் 300 LXX மற்றும் ஜொசிஃபஸ் இரண்டிலும் இடம்பெறுகின்றன, 27, LXX இல் உள்ளன ஆனால் ஜோசபஸில் இடம்பெறவில்லை, 67, ஜோசஃபஸில் உள்ளன ஆனால் LXX இல் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது. லூக்கிற்கு இணையாக, தனித்த எழுத்தராக ஜோசபஸ், ஹோபர்ட் பட்டியலிட்டதில் தொண்ணூறு சதவீத ‘மருத்துவ வார்த்தைகளை’ பயன்படுத்துகிறார். ஹோபர்ட் பட்டியலை, அதே காலகட்டத்தைச் சேர்ந்த புளூடார்ச் மற்றும் லூசியன் ஆகிய இரு சாதாரண எழுத்தர்களின் லெக்சிகாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானது, இந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ காணப்படுவதாகக் தெரிகிறது. மீதமுள்ள முப்பது அல்லது நாற்பது வார்த்தைகளில் சில சொற்கள் லூக்காவில் குறிப்பிடத்தக்க மருத்துவக் முக்கியத்துவம் கொண்டதாகத் தெரிகிறது. எனவே, ஹோபர்ட்டின் பட்டியல் எந்த ஒரு சிறப்பு மருத்துவப் பயன்பாடும், முக்கியத்துவம் இல்லாத பொதுவான சொற்கள், பலவற்றைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவர் பட்டியலிடும் வார்த்தைகள் மருத்துவ எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டவை என்பதை அவர் மிகவும் விடாமுயற்சியுடன் காட்டினாலும், தொழில்முறை பயிற்சி இல்லாத மற்ற எழுத்தாளர்களால் அவை பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டவில்லை. அவருடைய வாதத்தை ஏற்றுக்கொள்பவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். ஹர்னாக் ‘அவர் மிகைப்படுத்தலையே நிரூபித்திருக்கிறார்’ என்று கூறுகிறார். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.41)
    The style of Luke bears no more evidence of medical training and interest than does the language of other writers who were not physicians. This result, it must be confessed, is a purely negative one.
    மருத்துவராக இல்லாத மற்ற எழுத்தாளர்களின் மொழியைக் காட்டிலும், லூக்காவின் பாணி, மருத்துவப் பயிற்சி மற்றும் ஆர்வத்திற்கு எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த முடிவு முற்றிலும் எதிர்மறையானது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.51)
    எனவே ஹோபர்ட்டின் ஆய்வை அவரது வாதத்தை ஏற்பவர்கள் கூட முழுமையாக சரிகாணவில்லை என்பது HENRY J. CADBURY அவர்களது வாதத்தில் இருந்து அறியமுடிகிறது. எனவே இரு லூக்காவில் ஒருத்தர் மருத்தவர் அவரே லூக்காவின் படியான சுவிஷேசத்தின் எழுத்தர் என்ற வாதமும் நிலைக்க முடியவில்லை. உள்ளடக்கத்தை கொண்டு எந்த லூக்கா என்பதை உறுதியாக நிறுவ இயலாத குழப்ப நிலையே நிலவுகிறது.

நாம் முன்சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று ஆதாரங்கள் குறித்து தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை காணும் போது, எப்படி புதிய ஏற்பாட்டின் உள்ளடக்க தரவுகளில் யூதர் லூக்கா, யூதரல்லாத லூக்கா என்று குழப்பம் நிலவுகிறதோ, அதே குழப்பம் வரலாற்று தரவுகளிலும் பிரதிபலிக்கிறது. யூசிபியஸை பொறுத்தவரை (கொலோசெயர் 4:10-14)ல் கூறப்படுவது போல் லூக்கா யூதரல்லாத லூக்கா, லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதினார், ஸலாமிஸின் எபிஃபேனியஸ் மற்றும் ஹிப்போபோலிடஸ் ஆகியோரை பொறுத்தவரை யூத லூக்கா இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 70 அப்போஸ்தலர்களில் ஒருவர். வழிதவறி சென்றவரை பவுல் மீட்டெடுத்தார் இந்த யூத லூக்காதான் லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதினார். இந்த வரலாற்று ஆவணங்களின் குழப்பத்தில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் யாரோ ஒருவர் எழுதிய நூலிற்கு லூக்காவின் பெயரை சூட்டுவதற்கு வரலாற்றில் கிறித்தவ உலகம முயற்சி செய்ததையும், தற்காலத்தில் செய்வதையுமே  காட்டுகிறது. 

" Hence the Apostle praises him deservedly when he says, "He is praised for his Gospel throughout all the churches (2 Cor 8:18) .Scripture says this about no one else; it uses the expression only for Luke.(Origen’s Homilies on Luke, HOMILY 1) 

ஆகவே, “சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரன் (2 கொரிந்தியர் 8:18)” என்று கூறும் போது அப்போஸ்தலர் அவரைத் தகுதியுடன் பாராட்டுகிறார். வேதம் வேறு யாரை பற்றியும் இப்படி கூறவில்லை; லூக்காவிற்கு மட்டுமே இந்த வாக்கியத்தை பயன்படுத்துகிறது. .(Origen’s Homilies on Luke, HOMILY 1) "

    மேலே ஓரிகன் குறிபிட்ட படி ஒருவர் மிகவும் சிறப்பிற்குரியவராக இருந்து அவர் நற்செய்தி நூலை இயற்றியும் இருந்தால், அந்த நபரின் வரலாற்றில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்.


லூக்கா குறித்த முடிவில் புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று ஆவணங்களும், குழம்பி நிற்கும் நிலையில், அது இயற்றப்பட்டதாக அனுமாகிக்கப்படும் கால அட்டவனையும் உண்மையில் கிறித்தவ உலகம் எவ்வளவு இந்த விஷயத்தில் குழம்பி நிற்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது. அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c.54-56 A.D. Blass
c.53-57 A.D. Kuppers
c.58-62 A.D. Alford, Schaff,
c.61-62 A.D. Belser 
c.59-63 A.D. Cornely 
c.63-64 A.D. Horne, Michaelis, Guericke, Fillion, Resch.
c.65-70 A.D. Godet, Hahn, Schanz, Schafer, Batiffol.
c.60-70 A.D. Jacquier,Harnack.
c.70-80 A.D. Bleek, Beyschlag, Weiss, Adeney, Bartlet, Bovon, Plummer, Sanday, Wright, Zahn, Feine.
c.75-90 A.D.Barth
c.80-90 A.D. Kostlin, Mangold, Abbott, Carpenter, J. Weiss, Bacon, McGiffert, Julicher , Briggs, 
c.90- 100 A.D. Keim, Renan, Soltau, Wernle, Knopf, Schmiedel, Burkitt, Loisy, Peake, Montefiore, Buckley.
c. 100 A.D. Holsten, Scholten, Pfleid., J. Weiss, O. Schmiedel, W. Haupt. 
c.100-110 A.D.
Volkmar, Rovers, Holtzmann, S. Davidson, Hilgenfeld, Weiss, Hausrath, Schmiedel.
c. 130 A.D. Baur

    கி.பி. 50 முதல் கி.பி.130 வரையிலான கிட்டதட்ட 80 ஆண்டுகால இடைவெளியை லூக்காவின் படியான சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக கிறித்தவ உலகம் கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த கால கருத்தியலுக்கு ஒவ்வொரு அறிஞர்கள் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கொண்டிருப்பார்கள்.

    எனவே யார் லூக்கா என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், லூக்கா என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் தங்களுக்குள் முரணபட்டு அரைகுறையாக இருக்கிறது என்ற நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் லூக்காவினால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “லூக்காவின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “லூக்காவின் படியான சுவிஷேசம்" அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி லூக்காவின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.   


நாம் ஒத்தமை நற்செய்தி நூல்களில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அதற்கு தீர்வு என்ற பெயரில் கூறப்பட்ட அனுமானங்கள் குறித்தும் ஓரளவு விரிவாக கண்டிருந்தோம். இந்த மத்தேயூ மாற்கு லூக்கா ஆகியோரின் படியான சுவிஷேசங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் மிக முக்கிய இட்த்தினை ஒத்தமை சிக்கல் வகிக்கிறது என்பதையும் விளக்கியிருந்தோம். இந்த ஒத்தமை நூல்களின் எழுத்தர்கள் குறித்த  புதிய ஏற்பாட்டின் தரவுகள் அரைகுறையானதாகவும், முரண்படுபவையாகவும் இருப்பதாலும், வரலாற்று ஆவணங்கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, புதிய ஏற்பாட்டின் தகவல்களையும் பதம் பார்ப்பதாலும், இந்த நூல்களை எழுதியவர்கள் யார் என்பதில் ஒரு மையக்கருத்தில் கிறித்தவ உலகால் இணைய முடியவில்லை. ஒத்தமை சிக்கலின் ஊற்றுக்கண்ணே இந்த அரைகுறையான போலியான வரலாற்று ஆதாரங்களும், அனுமானங்களும் கையாடலுமே என்பதை புதிய ஏற்பாட்டின் மாபெரும் அறிஞர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த J. A. Fitzmyer பின்வருமாறு குறிப்பிடுகிறார்

J. A. Fitzmyer summarizes the grand shortcoming this way (Fitzmyer 1981 : 63):
    [The synoptic problem is] a problem that has thus far failed to find a fully satisfying solution. The main reason for this failure is the absence of adequate data for judgment about it. Extrinsic, historically trustworthy data about the composition of these Gospels are totally lacking, and the complexity of the traditions embedded in them, the evangelists ’ editorial redaction of them, and their free composition bedevil all attempts to analyse objectively the intrinsic data with critical literary methods. (The Blackwell companion to New Testament P.No: 241)
    (சினோப்டிக் பிரச்சனை) இதுவரை ஒரு முழுமையான திருப்திகரமான தீர்வைக் கண்டுபிடிக்கத் தவறிய ஒரு பிரச்சனை. இந்த தோல்விக்கான முக்கிய காரணம், இது பற்றிய தீர்வுக்கு போதுமான தரவு இல்லாததுதான். இந்த நற்செய்திகளின் தொகுப்பு பற்றிய வெளிப்புற, வரலாற்று ரீதியாக நம்பகமான தரவு முற்றிலும் இல்லை, மேலும் அவற்றில் பொதிந்துள்ள மரபுகளின் சிக்கலான தன்மை, சுவிசேஷகர்களின் எழுத்துருவாக்க திருத்தங்கள், மற்றும் அவர்களின் கட்டற்ற தொகுத்தல் ஆகியவை விமர்சன இலக்கிய முறைகள் மூலம் உள்ளார்ந்த தரவுகளை நடுநிலையாக பகுப்பாய்வு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பாழ்படுத்திவிடுகிறது.(The Blackwell companion to New Testament P.No: 241)

   இப்படியான அரைகுறையான வரலாற்று ஆதாரங்களை உடைய ஒரு நூலை தங்களது வேதமாக கொண்டிருக்கும் கிறத்தவ மிசனரிகள், அல் குர்ஆனின் பாதுகாப்பை கேள்வி கேட்க புறப்பட்டுள்ளனர். ஒரு பொருள் எப்படி உருவானது என்பது அறியாத நிலை ஏற்படும் போதெல்லாம், அதிலிருந்து வந்திருக்கும், இதிலிருந்து வந்திருக்கும் என்ற அனுமானங்களே விடையாக இருக்கும். அதே நிலைதான் ஒத்தமை நற்செய்தி நூல்களுக்கும் அதன் சிக்கல்களுக்கும். நற்செய்தி நூல்களின் எழுத்தர்கள், அவற்றின் வரலாறு, இயற்றப்பட்ட காலம் என்று எதிலும் கிறித்தவ உலகில் எந்த ஒத்த கருத்தும் ஏற்பட வில்லை. எனவே அந்த நற்செய்தியில் இருந்து இது தோன்றியிருக்கும் என்ற அனுமானம் தேவைப்படுகிறது. அல்லாஹு அஃலம். இன் ஷா அல்லாஹ் இனியும் தொடர்வோம்…….

Saturday, July 20, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    
புதிய ஏற்பாட்டின் நூல்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆவாணங்களை நிலை குறித்து தொடராக கண்டு வருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக காணவிருப்பது மாற்கு சுவிஷேசமாகும். மாற்கு சுவிஷேசத்தை பொறுத்தவரை பீட்டரின் சீடர் அல்லது மொழிபெயர்ப்பாளரான மாற்கு என்பவரால் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்கு குறித்த வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவற்கு முன்பாக, யார் இந்த மாற்கு? என்பதையும், கிறித்தவ உலகம் எப்படி யார் இந்த மாற்கு என்பதில் தெளிவற்று நிற்கிறது என்பதையும் முதலில் காண்போம்.


    நாம் சென்ற கட்டுரையில் கண்டது போலவே மாற்கின் படியான சுவிஷேத்தின் எந்த இடத்திலும் இது மாற்கு எழுதியது என்பதற்கோ, நேரடியாக கண்ட சாட்சியம் என்பதற்கோ எந்த வெளிப்படையான செய்திகளையோ, நேரடியாக கண்ட சாட்சியங்கள் விவரிக்கும் முறையயோ இந்த சுவிஷேசம் பெற்றிருக்க வில்லை. இந்த மாற்கு யார் என்பது குறித்து கிறித்தவ உலகம் என்ன கூறிவருகிறது என்பதை முதலில் இங்கு காண்போம்.

    “இந்த சுவிஷேசத்தை எழுதிய மாற்கு, பேதுருவிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளர் அல்லது விரிவுரையாளர் ஆவார். எனவே பேதுருவிடம் கேட்டே இந்த சுவிஷேசம் எழுதப்பட்டது” என்பது கிறித்தவ உலகம் இந்த சுவிஷேசம் குறித்து கூறிவருவதாகும். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் ஜான் மாற்கு என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தல நடபடிகள்  12:12)
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.(அப்போஸ்தல நடபடிகள்  12:25) 
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
(அப்போஸ்தல நடபடிகள்  13:5) 
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.(அப்போஸ்தல நடபடிகள்  13:13)

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானை கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 
(அப்போஸ்தல நடபடிகள் 15:35-39)
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(பிலேமோன் 1:24) 
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.(கொலோசெயர் 4:10)

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.(2 தீமோத்தேயு 4:11)  
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(1 பேதுரு 5:13)

    மேற்குறிபிட்ட வசனங்களில் 1பேதுரு தவிர எந்த இடத்திலும் மாற்க் பேதுருவுடன் இணைந்து செயல் பட்டதாக அறியப்பட வில்லை. ஆனால் மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முழுமைபெறாமல் சிக்கலை தோற்றுவிக்கிறது. பவுல் பிலேமோனிற்கு நிருபம் எழுதும் போது அவர் செசரியாபட்டணத்தில் சிறைக்காவலில் இருந்த போது எழுதியதாகும்.
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி ஒரு நிருபத்தையும் எழுதினான்; ……………அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.( Acts 23:24-35)

இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான். (Acts 24:27) 

        மேற்குறிபிட்ட செய்திகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது என்பதை காட்டுகிறது. அதாவது செசரியாபட்டணத்தில் பேலிக்ஸ் மற்றும் பொர்க்கியுபெஸ்து ஆகிய இருவர் தேசாதிபதியாக இருந்த காலத்தில் என்று கூறுகிறது. ரோம வரலாற்றாளர் ஜோஸபஸின் படி கிபி 60ல் பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிகிறது. ஆக பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில் பவுல் சிறையில் இரண்டாண்டு காலம் கழித்தார் என்றால் அது கிட்டதட்ட கிபி 59 முதல் 60 வரை உள்ள காலம்.

    மறுபுறம் 1பேதுரு நிருபம், பாபிலோனிய சபையில் இருந்து பேதுரு எழுதுவதாக கூறுகிறது. அன்று பாபிலோனிய சபை என்று எதுவும் இருக்கவில்லை. அது ரோம் திருச்சபையையே குறிக்கிறது என்று கிறித்தவ விரிவுரையாளர்கள் சப்பை கட்டு கட்டி வருகின்றனர்(1). அது ரோம் திருச்சபையை குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், பேதுருவின் ரோமின் ஊழியக்காலம் நீரோ மன்னனின் ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதி. அதாவது கிபி 64-68.(2). அதன் கடினத்தை கருத்தில் கொண்டே 1பேதுரு ரோமை, “பாபிலோனிய சபை” என்று கூறுகிறது என்று அனுமானிப்போம். கி.பி.60 வரை ஜான் மாற்கு தன்னுடன் கழித்ததாக பவுல் பிலேமோன், கொலோசெயர் ஆகிய நிரூபத்தில் கூறுவதை காணமுடிகிறது. அதன் பிறகும் தன்னிடம் அழைத்து வர பவுல் கூறுவதாக தீம்மோத்தியுவிற்கு கடிதம் எழுதியதை அறிய முடிகிறது. தீம்மோத்தியு தன்னுடைய ஊழியகாலத்தை துருக்கி நாட்டில் செலவிட்டதாக அப்போஸ்தல நடபடிகள் 20:4-5, மற்றும் யூஸுபியஸின் சர்ச் வரலாறு கூறுகிறது. இதற்கு முன்பும் பிறகும் மாற்கு பேதுருவிடம் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே 1பேதுருவில் கூறப்படும் மாற்க்தான், பவுலின் ஊழியக்காரனான ஜான் மாற்கு என்பதையும், அவர்தான் மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதினார் என்பதை ஆணித்தரமாக நிறுவ இயலாது. அனுமானிக்க கூட போதிய முகாந்திரம் இல்லை.

    மேலும் இதே சிறையில் இருக்கும் போது பவுல் எழுதிய நிருபமான ரோமர் 16:3-15 வரை, ரோம சபையில் இருந்த தனது வேலையாட்கள் முதற்கொண்டு பலருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பவுல் பேதுருவையே விட்டுவிட்டார், ரோமில் மாற்கு இருந்ததாக எந்த குறிப்பும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மேலும் அன்றைய காலத்தில் யூதர்கள் மத்தியில் மிகப்பிரபலமான 99 பெயர்களில் மாற்கு என்ற பெயரும் ஒன்று. அதிகமான யூதர்கள் அந்த பெயரை சூட்டிக்கொண்டிருந்தனர் (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, Table 6: The 99 Most Popular Male Names among Palestinian Jews, 330 BCE-200 CE58). இந்நிலையில் மிக எளிமையாக கூறுவது என்றால், புதிய ஏற்பாட்டின் தரவுகளை கொண்டு பேதுருவுடன் தொடர்பில் இருந்த மாற்குதான், பவுலின் அடிமையாக இருந்த ஜான் மாற்கு என்று நிறுவ இயலாது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை ஒப்பு நோக்கும் போது இன்னும் சிக்கல்கள் எப்படி வருகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளில் இருக்கும் குளறுபடிகள்:

    நாம் சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளை கண்டிருக்கிறோம். அந்த தரவுகளில் இருக்கும் குளறுபடிகள் என்ன என்ன என்பதை முதலில் காண்போம்.
👉மாற்கு சுவிஷேசம்தான் முதலில் எழுதப்பட்டதாக மொழியியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் அறிய இயலும். ஆனால் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அனைத்தும் மத்தேயூவிற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறது. 

👉மாற்கு பேதுருவின் மரணத்திற்கு பிறகு மாற்கு சுவிஷேசத்தை எழுதியதாக ஐரீனியஸ் கூறுகிறார். ஆனால் அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் பேதுரு உயிருடன் இருக்கும் போதே எழுதியதாக கூறுகிறார். மேலும் அதனை பேதுரு கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் கி.பி, 4ம் நூற்றண்டை சார்ந்த எபிஃபேனியஸ் பேதுருதான் மாற்கிற்கு சுவிஷேசம் எழுத கட்டளையிட்டதாக கூறுகிறார்.  

👉யோவான் கிறிசோஸ்தோம் மாற்கு எகிப்தில் சுவிஷேசம் எழுதியதாக கூறுகிறார். மேலே குறிபிட்ட அனைவரும் ரோமில் எழுதியதாக கூறுகிறார்கள்.
ஆரம்ப கால திருச்சபைகள் மாற்கின் படியான சுவிஷேசத்தை ஏற்றிருந்தன, என்றால் அதன் ஆசிரியரின் வரலாற்று குறிப்பில் ஏன் இத்துனை குளறுபடிகள். கி.பிக்கு முன்பே பலரும் அறிந்த நூல்களின், ஆசிரியர்களின் வரலாற்று குறிப்புகள்  தெளிவாக வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கையில், அனைவரும் அறிந்த பரவலான நூலின் வரலாறு இவ்வளவு குளறுபடிகளுடன் இருக்காது. அதற்கு மாற்றமாக இங்கு இருப்பதை காணமுடிகிறது. எழுதப்படிக்க தெறியாத கூட்டத்திடம் இந்த நற்செய்தி நூல்கள் வந்து சேரவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இனி வரலாற்று தரவுகள் எப்படி புதிய ஏற்பாட்டின் தரவுகளுடன் மோதுகிறது என்பதை காண்போம்.


நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே புதிய ஏற்பாட்டின் மாற்கு குறித்த குறிப்புக்கள் அரைகுறையாக, தெளிவற்றதாக இருப்பதை விளக்கியுள்ளோம். மேலே கொடுக்கப்பட்ட வரலாற்றுத்தரவுகள் மேலும் குளறுபடிகளை இங்கு அதிகப்படுத்துவதை கீழே காண்போம். 4ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள எந்த வரலாற்று தரவுகளும், எந்த இடத்திலும் மாற்கை பவுலுடன் இணைத்து கூறவில்லை. மாற்கை பேதுருவுடன் மட்டுமே இணைத்து கூறுகிறார்கள். 
Mark the disciple and interpreter of Peter wrote a short gospel at the request of the brethren at Rome embodying what he had heard Peter tell. When Peter had heard this, he approved it and published it to the churches to be read by his authority as Clemens in the sixth book of his Hypotyposes and Papias, bishop of Hierapolis, record. Peter also mentions this Mark in his first epistle, figuratively indicating Rome under the name of Babylon “She who is in Babylon elect together with you saluteth you and so doth Mark my son.” So, taking the gospel which he himself composed, he went to Egypt and first preaching Christ at Alexandria he formed a church so admirable in doctrine and continence of living that he constrained all followers of Christ to his example. Philo most learned of the Jews seeing the first church at Alexandria still Jewish in a degree, wrote a book on their manner of life as something creditable to his nation telling how, as Luke says, the believers had all things in common at Jerusalem, so he recorded that he saw was done at Alexandria, under the learned Mark. He died in the eighth year of Nero and was buried at Alexandria, Annianus succeeding him. ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், ரோமில் உள்ள சகோதரர்களின் வேண்டுகோளின் பேரில் பேதுரு சொன்னதைக் கேட்டு ஒரு சிறிய நற்செய்தியை எழுதினார். கிளெமென்ஸ் அவருடைய ஹைப்போடைபோஸ்ஸின் ஆறாவது புத்தகம் மற்றும் ஹைராபோலிஸின் பிஷப் பாபியஸ் பதிவின் படி, பேதுரு இதைக் கேட்டதும், அதை அங்கீகரித்து, படிக்கும்படி தேவாலயங்களுக்கு வெளியிட்டார், பேதுரு தனது முதல் நிருபத்தில், இந்த மாற்க்கை குறிப்பிடுகிறார். பாபிலோன் என்ற பெயரில் ரோமை அடையாளப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார் “உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” எனவே, அவரே இயற்றிய நற்செய்தியை எடுத்துக் கொண்டு, அவர் எகிப்துக்குச் சென்று, முதலில் அலெக்ஸாண்டிரியாவில் கிறிஸ்துவைப் பிரசங்கித்து, கோட்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் போற்றத்தக்க ஒரு தேவாலயத்தை உருவாக்கினார், அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் தனது முன்மாதிரிக்குக் கட்டுப்படுத்தினார். அலெக்ஸாண்டிரியாவில் உள்ள முதல் தேவாலயம் இன்றும் ஓரளவு யூதமயமாக இருப்பதை பார்த்த யூதர்களில் மிகவும் கற்றறிந்த ஃபிலோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, அது எப்படி அவரது தேசத்திற்கு பெருமை சேர்க்கும்? என்று ஒரு புத்தகத்தை எழுதினார், லூக்கா சொல்வது போல, விசுவாசிகளுக்கு ஜெருசலேமில் எல்லா விஷயங்களும் பொதுவானவை, எனவே கற்றறிந்த மார்க்கின் கீழ் அலெக்ஸாண்டிரியாவிலும் இவ்வாறு நடந்ததைக் கண்டதாக அவர் பதிவு செய்தார். அவர் நீரோவின் எட்டாவது ஆண்டில் இறந்து, அலெக்ஸாண்ட்ரியாவில் அடக்கம் செய்யப்பட்டார், அவருக்குப் பிறகு அன்னியனஸ் பொறுப்பேற்றார். ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
When Nero was in the eighth year of his reign, Annianus succeeded Mark the evangelist in the administration of the parish of Alexandria. (The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
நீரோ தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் இருந்தபோது, அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையின் நிர்வாகத்தில் சுவிசேஷகரான மாற்கு மறைந்த பிறகு பிறகு அன்னியனஸ் பதவியேற்றார்.(The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
        புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் பேதுருவுடன் கிபி 64ல் ரோமில் ஓர் இடத்திலும், துருக்கியில் திமோத்தியுடன் இருந்ததாக மற்றோர் இட்த்திலும் கூறுகிறது. கூறுகிறது. வரலாற்று தரவுகள் கிபி 62ல் மாற்க் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து விட்டதாக கூறுகிறது புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் கிபி 60ல் பவுலுடன் இருந்ததாக கூறுகிறது. கிபி 60ல் பவுலுடன் பயணப்பட்ட மாற்கு கிபி 62ல் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து, பிறகு மீண்டும் பேதுருவுடன் கி.பி.64ல் ரோமில் வலம் வந்தாரா என்ன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் அந்த காலத்தில் கடக்கவே இந்த ஆண்டுகள் போதுமானதாய் இருக்காது. அப்படி இருக்கையில் இது தெளிவான முரணாக இருக்கிறது. மேலே நாம் குறிபிட்ட கருத்துக்களை உறுதி படுத்தும் வண்ணம் ஹிப்போபோலிடஸ் (மரணம் கி.பி. 236), தனது “On the Seventy Apostles” என்ற நூலில், நற்செய்தியாளர் மாற்கு(வ.எண்:14), பார்னபாவின் உறவினர் மாற்கு(வ.எண்:56) மற்றும் ஜான் மாற்கு வ.எண்:65) ஆகிய மூவரையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறார்.

    எனவே மேற்குறிபிட்ட வாதங்களின் அடிப்படையில் வரலாற்று தரவுகளும், புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும்படி குழப்பங்களற்ற ஆணித்தரமான ஆதாரங்கள் புதிய ஏற்பாட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.  எனவே மாற்கின் சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தை கொண்டு, யார் இந்த மாற்க் என்பதை உறுதி படுத்துவோம்.


    கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும் வகையில், புதிய ஏற்பாட்டின் எந்த இடத்திலும் “மாற்காகிய நான் பேதுருவிடம் கேட்டு இந்த சுவிஷேசத்தை எழுதினேன்” அல்லது மாற்கு பேதுருவிடம் கேட்டு சுவிஷேசம் எழுதினார் என்று இடம் பெறவில்லை. அதன் உள்ளடக்கத்தை சற்று ஆய்வு செய்தோம் என்றால் இந்த சுவிஷேசத்தை எழுதியவர் நிச்சயம் மேலே கூறப்பட்ட பேதுருவின் விரிவுரையாளரும் அல்ல, பவுலின் அடிமையான ஜான் மாற்கும் அல்ல என்பது விளங்கும்


    மாற்கின் படியான சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். அது, இயேசுவின் சீடரான பேதுருவிற்கு மட்டும் உரித்தான செய்திகள் மறைக்கப்பட்டிருப்பது அல்லது விடுபட்டிருப்பதாகும். உதாரணமாக பின்வரும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.
அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.(மத்தேயூ 16:16-18)
    மேலே கூறப்படும் நிகழ்வில் இயேசுவை கிறிஸ்து என்று பேதுரு அறிக்கை இடுகிறார். அதற்கு பகரமாக இயேசு பேதுருவை ஆசீர்வதித்தும் உயர்த்தியும் பேசுவதை மத்தேயூவின் படியான சுவிஷேசத்தில் காணமுடிகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் இதே செய்தியை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்று பார்ப்போம்.
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். (மாற்கு 8:29-30)
அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்.
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; (யோவான் 18:5-10)

    இயேசுவை கைது செய்யும் போது நிகழ்ந்ததை யோவான் சுவிஷேசம் பதிவு செய்துள்ளது. அது பேதுரு இயேசுவின் மீது கொண்டிருந்த பற்றை பட்டவர்த்தனமாக பதிவு செய்கிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் எப்படி இந்த நிகழ்வை பதிவு செய்கிறது என்பதை பார்ப்போம்

அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:46-50)

அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்:

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். (யோவான் 20: 3-7)

மாற்கு சுவிஷேசத்தில் மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறவில்லை. உண்மையில் மாற்கு சுவிஷேசத்தை எழுதியவர் பேதுருவின் சீடராக இருக்கும் பட்சத்தில் பேதுருக்கு மட்டுமே உரித்தான் தகவல்கள் ஏன் இல்லாமல் போனது. இந்த செய்தி விடுபடுதல் என்பது மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதியவர், நிச்சயம் பேதுருவின் விவரிப்பாளர் அல்ல என்பதை காட்டுகிறது.  


    மாற்கு ஆகமத்தை இயற்றிவர் ஜான் மாற்கு யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த சுவிஷேசத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. உதாரணமாக பின்வரும வசனத்தை காண்போம்.   
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)
        ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுருவோ, பவுலோ கூறியிருக்க மாட்டார்கள். இதை நிச்சயம் பேதுரு/பவுலின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் சரிசெய்யப்பட்டு கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. (மத்தேயு: 15:4).
இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)
அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).
        மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் முழு யூதர்களும் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது. ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). ஒன்று பேதுரு/ பவுல் ஆகிய இருவரும் தப்பும் தவறுமாக யூதரான மாற்கிற்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டும். அல்லது மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் பேதுரு/ பவுலிற்கு நேரடி தொடர்பில்லாத, யூதரல்லாதவராக இருக்கவேண்டும். எனவேதான் அமேரிக்காவின் விவிலிய அறிஞரான கிரைக் எவான்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
The difficulty is ascertaining the identity of Mark. Scholars debate whether he is John Mark of Jerusalem, associate of Paul (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11), and the one who may well be assumed by Papias as an associate of Peter (e.g. Hengel 45–53; Gundry 1026–45), or another person simply named Mark who was not native to Palestine. Many scholars have opted for the latter option due to the Gospel’s lack of understanding of Jewish laws (1:40–45; 2:23–28; 7:1–23), incorrect Palestinian geography (5:1–2, 12–13; 7:31), and concern for Gentiles (7:24–28:10) (e.g. Marcus, 1999: 17–21). (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மார்க்கின் அடையாளத்தைக் கண்டறிவதே சிரமம். அவர், பவுலின் கூட்டாளியான ஜெருசலேமின் ஜான் மாற்கா (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11) மேலும் அவரே பேதுருவின் கூட்டாளியாக பேப்பியஸால் அனுமானிக்கப்பட்டவராக இருக்கக்கூடும், (e.g. Hengel 45–53; Gundry 1026–45), அல்லது பாலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டிராத மாற்கு என்ற மற்றொரு நபரா என்று அறிஞர்கள் விவாதிக்கின்றனர். யூதச் சட்டங்களைப் பற்றிய நற்செய்தியின் புரிதல் இல்லாததாலும்,(மாற்கு 1:40–45; 2:23–28; 7:1–23) தவறான பாலஸ்தீன புவியியல் குறிப்புக்கள் (மாற்கு 5:1–2, 12–13; 7:31), மற்றும் புறஜாதிகள் மீதான அக்கறை(மாற்கு 7:24–28:10) ஆகிய காரணங்களினால்  பல அறிஞர்கள் பிந்தைய கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மாற்கு எழுதப்பட்ட காலம்:

    மாற்கு சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மாற்கு சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது.  அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c. 44 A.D. Belser
c. 48 A.D. Birks
c. 44-49 A.D. Allen
c. 55-57 A.D. Hitzig
c.  ̴55 A.D. Gloag
c. 63 A.D. Mill
c. 64-67 A.D. Bartlet, Schafer, Kuppers, Schanz, Zimmermann, Zahn, J.Weiss
c. 65-70 A.D. Abbott, Alford, W. Bruckner, Stanton, Swete, Salmond, Wendt, Weiss, Harnack Maclean, Barth, Peake, Hoffmann, Burkitt.
c. 70 A.D. Carpenter, Menzies, Feine, W. Haupt
c. 70-80 A.D.Volkmar , Renan, Beyschlag, Wright, Wernle, Bacon, Well- hausen, von Soden, Loisy, O.Schmiedel, Montefiore
c. 75-85 A.D. Goguel 
c. 80-90 A.D. Holsten, Hilgenfeld, Rovers , Bleek.
c. 100 A.D. Hoekstra
c. 100-110 A.D.
Kostlin 
c. 115-120 A.D. Keim 
c. 120 A.D. S. Davidson
c. 120-130 A.D. Usener
c. 130 A.D. Baur

        கிறித்தவ அறிஞர்களால் கிட்டதட்ட 90 ஆண்டு கால இடைவெளி மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதற்கான காலமாக அனுமானிக்கப்படுகிறது,. இது ஒவ்வொருவரும் அவர் அவர்களது அனுமானத்திற்கு ஒரு ஆதாரத்தை கொண்டிருப்பார்கள். இயற்றப்பட்ட வருடத்திலும் எந்த ஒரு உறுதியான நிலைபாடும் இல்லை. வரலாற்று ஆவணங்களின் பலவீனம்தான் இந்த நிலைக்கு காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.

    எனவே யார் மாற்கு என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், மாற்கு என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அரைகுறையாகத்தான் இருக்கிறது என்ற நிலையில், புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று தரவுகளும் முரண்பட்டு நிற்கும் நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் மாற்கால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “மாற்கின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “மாற்கின் படியான சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மாற்கின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.