ஹஜ் பயணம் - 2
ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று
4000 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வசிக்காத, வறண்ட ஒரு பாலைவனம் தான் மக்கா.
Safaa & Marwa |
குழந்தை இஸ்மாயில் பசியினால் துடிக்கும்போது, தாய் ஹாஜரா ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணம் அங்கே இருந்த ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடிச் சென்று பார்க்கின்றார்கள்.
இறுதியில் இறைவனிடம் பிரார்த்தித்த நிலையில், குழந்தைக்கு அருகே மயக்கமடைந்து விடுகின்றார்.
![]() |
Zamzam water entering the well from the stony horizon |
கடுமையான பாலைவனத்தில் மிகச் சிறந்த நீரூற்று இவர்களின் வசம் வந்ததால் இதை வைத்து கடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்களிடம் உணவுகளை பரிமாற்றம் செய்து வந்தனர்.
![]() |
Conducting Water Sampling Test |
ஹஜ் முடிந்து வருபவர்கள், கேன்களில் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதை காணலாம். முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டு அருந்திப் பாருங்கள். இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு.
![]() |
Zamzam drinking water container for hajis |
அன்று ஹாஜரா அவர்கள், இரன்டு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய சம்பவத்தை வருங்கால சந்ததிகள் நினைவு கூறும் விதமாகத் தான் மக்கா பயணம் செல்பவர்களின் அலுவல்களில் 7 முறை இரு மலைகளுக்கிடையே நடப்பதும் ஒன்று.
Part 1: ஹஜ் பயணம் - பாகம் 1
Ref:
1. BBC
2. Zam Zam studies and Research Center
No comments:
Post a Comment